states

கனியாமூர் பள்ளி விடுதி தளத்திற்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.30- கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்திலுள்ள சக்தி மெட்ரிக் பள்ளி யில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணடைந்தார். இதையடுத்து நடந்த போராட்டத்தை காவல்துறையும் பள்ளியின் நிர்வாகமும் முறையாக கையாளவில்லை. இதனையடுத்து, நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழு வதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்து விட்டதால், பள்ளியை திறக்க அனு மதிக்க வேண்டும் என்று அந்தப் பள் ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக் கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு கடந்தமுறை விசார ணைக்கு வந்தபோது,

மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் ‘ஏ’  பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவை ப்படலாம்” என்று தமிழக அரசு தெரி வித்திருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதி பதி, குறிப்பிட்ட அந்த கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு புதனன்று(நவ.30) விசார ணைக்கு வந்தபோது சிபிசிஐடி காவல் துறை தரப்பில், “விசாரணையை பெரு மளவு முடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப் படும். பள்ளியை திறக்க ஆட்சே பனை இல்லை. இரு பள்ளிகளையும் முழுமையாக திறப்பது குறித்து நீதி மன்றம் முடிவெடுக்கலாம். மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது” என்றும் தெரி விக்கப்பட்டது.

மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், “அனுமதி பெறா மல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கறி ஞர் எம்.எம்.ரவி என்பவர் தரப்பில் இடை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளி யை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  நேரடி வகுப்புகளை நடத்த அனு மதியளித்து உத்தரவிட்டார். இசிஆர் பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகிய வற்றில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம். பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், ‘ஏ’ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன் படுத்தக் கூடாது. விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித் தும் உரிய முடிவெடுக்க வேண்டும்.  தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த ‘சி’ மற்றும் ‘டி’ பிளாக்குகளை பயன் படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு பின்னர், நீதி மன்றம் மீண்டும் அப்போதைய நிலையை ஆராயும் எனக் கூறி விசார ணையை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு களை நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டு ள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அறக்கட்டளை தரப்பில் வழக்கறி ஞர் சாம்ராஜ், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம் பண்ணன், சிபிசிஐடி தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மாணவி யின் பெற்றோர் தரப்பில் வழக்கறி ஞர் சங்கரசுப்பு, இடையீட்டு மனு தாரர் எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறி ஞர் சிவஞானசம்பந்தம் ஆகியோர் ஆஜ ராகி வாதங்களை முன்வைத்தனர்.