மதுரை, ஜூலை 5- தற்காலிக ஆசிரியர்களை நியமிப்ப தற்கு என்ன அவசரம் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், நிரந்தர ஆசிரியர்கள நியமிக்கலாமே என்றும் தெரிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆசிரியர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணி யிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறி விப்பிற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப் பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராள மானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். இந்நிலை யில் தமிழக அரசின் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழி முறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர் களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளி களில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு செவ்வாயன்று முறையிடப்பட்டது. தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வ தற்கான நடைமுறைகள் தொடங்கப் பட்டுள்ளது ஆனால் 13 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. இதனையடுத்து நீதிபதி, எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பி னார். அரசு தரப்பில், டெட் (TET) முடித்த வர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப் பட்டது. அப்படியெனில் நிரந்தர ஆசிரியர் களை நியமிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவ சரம் உள்ளது எனக் கூறி வழக்கு பட்டி யலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.