தருமபுரி, மார்ச் 4- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி வேல் முருகன் வாச்சாத்தி கிரா மத்தில் சனியன்று கள ஆய்வு மேற்கொண்டார். வாச்சாத்தி வழக்கின் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ் வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி வேல் முருகன் சனியன்று வாச்சாத்தி கிரா மத்தில் கள ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வில் வாச் சாத்தியில் உள்ள ஏரி, ஆல மரம், வாச்சாத்தி அருகில் உள்ள கலசபாடி கிராமம் ஆகிய இடங்களை பார்வை யிட்டார். பாதிக்கப்பட்ட மக் களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம், மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கணேசன், மாவட்ட வன அலுவலர் அப்பலோ நாயுடு, அரூர் கோட்டாட்சியர் பொறுப்பு ராஜசேகரன் ஆகி யோர் உடனிருந்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் திய குழு உறுப்பினரும், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரு மான பெ.சண்முகம், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட நிர்வாகிகள் கண் ணகி, அன்புரோஷ், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன், பொருளா ளர் சி.வஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றிய செயலாளர் பி. குமார், பாப்பிரெட்டிப்பட்டி வட்டசெயலாளர் தி.வ.தனு சன் ஆகியோர் பங்கேற்ற னர்.
சண்முகம் பேட்டி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் வாச்சாத்தி மக்க ளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: வாச்சாத்தி கிராமத்தில் 1992ஆம் ஆண்டு வனத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சுமார்300க்கும் மேற்பட்ட வர்கள் சோதனை என்ற பெய ரில் கிராம மக்களின் உடை மைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வாச்சாத்தி மக்களை அடித்து துன் புறுத்தினர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய் தனர். இது உலகம் அறிந்த செய்தி, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு இவ் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு இவ்வழக்கு தீர்ப்புக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விழக்கை விசா ரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சனியன்று வாச்சாத்தி கிரா மத்தில் கள ஆய்வு மேற் கொண்டார். சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றுள் ளார். ஏற்கனவே இந்த வழக் கில் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நீதிக்காக 19 ஆண்டுகாலம் போராட வேண்டியிருந்தது. பின்னர் நீதி கிடைத்தது. அதன் பிறகு குற்றவாளி தரப்பில் இவ் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு இவ்வழக்கில் உள்ளவர்கள் அனைவருமே குற்றவாளி கள் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு மாவட்ட நீதி மன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பு மேல்முறையீடு உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் உறுதிசெய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதியும், நிவாரணமும் ஏற்கனவே வழங்கப்பட்டுள் ளது. இந்த தீர்ப்பை உறுதி செய்வதன் மூலம் நாட்டில் எவ்வளவு உயர்பொறுப்பில் இருந்தாலும் தப்பு செய்த வர்கள் தண்டிக்கப்படு வார்கள் என்பதை அதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்யும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.