சென்னை, செப். 5- சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், சென்னை பசுமை வழி சாலை மற்றும் நீலாங்கரை யில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவரது பேச்சு தேசிய அள வில் விவாதங்களை ஏற்படுத்தி யுள்ளது. அமைச்சர் உதயநிதி யின் பேச்சுக்கு பல்வேறு இந்து மதவெறி அமைப்புகள் கண்ட னம் தெரிவித்துள்ளன. மேலும், அவர் மீது புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன. மிரட்டல்... சனாதனம் குறித்து பேசிய தற்காக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமகம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்ததோடு, அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தைக் கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த மிரட்ட லுக்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு போதும்” என்றும் தெரிவித் திருந்தார். கூடுதல் பாதுகாப்பு இதைத்தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலை யில் உள்ள அமைச்சர் உதய நிதியின் இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. இந்தச் சாலையின் வழியாக வருகின்ற வாகனங்கள் காவல்துறையினர் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.