சென்னை, ஜன.1- தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலவு கிறது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக் கடல் மத்திய பகுதிகளில் நிலவக் கூடும்.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத் திற்கு வாய்ப்பு உள்ளது. நீ
லகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்க ளில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது. பொறுத்தவரை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வருகிற 3 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தி லும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் 3 ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.