சென்னை, ஆக. 8- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் வரும் 23ஆம் தேதி காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நிரந்தர செவிலியர்களின் பணி யுடன் ஒவ்வொரு தொகுப்பூதிய செவி லியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த ஆணையை நிறைவேற்றாத தால் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவி லியர்கள் மேம்பாட்டு சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த 27.7.2023 அன்று நீதிபதிகள் வைத்யநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜ ராகி துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழு தொகுப்பூதிய செவிலியர்களிடம் இருந்து பிரதி நிதித்துவம் பெற்று தொகுப்பூதிய செவி லியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்யவில்லை என்பதால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்க மளித்தது. செவிலியர்கள் தரப்பில் வழக்கறிஞர் நடராஜன் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் செவி லியர்களின் பிரதிநிதித்துவத்தை ஆராய வேண்டிய பொறுப்புடைய குழு வானது அதை செய்யாமல் மூன்று இயக்குநர்களை கொண்டு ஆராய்ந்து செவிலியர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தவறு என்று சுட்டிக் காட்டினர். இதையடுத்து நீதிபதிகள் செவிலியர்களின் விண்ணப்பங்களின் அசல் நகல்களை நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் வரும் 23ஆம் தேதி காணொலி வாயிலாக வழக்கு விசா ரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.