states

தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்

சென்னை, ஜூலை.24. தவறு செய்யும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடு மையாக எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மகப்பேறு மருத்து வர்கள் சங்கம் சார்பில் 3வது ஆண்டு சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து பேசியதாவது:   மருத்துவத்தொழில் மகத்தான தொழில். ஆனால், இந்த தொழிலில் சிலர் தவறான செயலில் ஈடுபகிறார்கள். 16 வயது சிறுமி ஒருவரிடம் இருந்து சில மருத்துவமனைகள் கருமுட்டை தானம் பெற்றுள்ளார்கள்.

அதற்காக அந்த சிறுமியை வறுத்தியுள்ளார்கள். இந்த விவகாரம் வெளியே வந்த தும், சம்மந்தப்பட்ட மருத்துவமனை களை 2 வார காலத்திற்குள் மூட அரசு உத்தரவிட்டது. அதோடு இந்த தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ கவுன்சிலுக்கும் வலியுறுத்தி யுள்ளோம். இதற்கிடையில் அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் நீதிமன்றத்தை நாடி, குறைந்தபட்சம் 6 வார காலத்திற்கு முன்பாக நோட்டீஸ் வழங்கவேண்டும் என்றும், தடையாணை பெற்றும் உள்ளனர். அதற்கு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யும்பணியும் நடைபெற்றுள்ளது. யாராக இருந்தாலும் தவறான செயலில் ஈடுபவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தே தீருவோம். அதை இங்கு சொல்வதற்கு காரணம், இந்த கருத்த ரங்கில் பங்கேற்றுள்ளவர்கள் அனை வருமே மகப்பேறு மருத்துவத்துறை வல்லுனர்கள். நீங்கள் இந்த செய்தி யை மற்றவர்களுக்கும் கொண்டு சென்று, அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அதே சமயத்தில் மருத்து வர்களின் நியாயமான தேவைகளை செய்து தர நாங்கள் தயாராக இருக்கி றோம்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்.சாந்த குமாரி, மகப்பேறு மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் தலைமை தாங்கினர். டாக்டர்.சாந்தகுமாரி  செய்தியாளர்க ளிடம் பேசுகையில், மருத்துவம் சார்ந்த சட்டங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை அனைத்து மருத்து வர்களும், மருத்துவமனை நிர்வா கங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். இதில், தவறு செய்யும் சில மருத்துவர்கள், மருத்து வமனை நிர்வாகங்களை ஊக்கு விப்பது கிடையாது. அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் கிடையாது. ஆனால், அதே சமயத்தில், முறை யாக, நேர்மையாக செயல்படும் மருத் துவர்களுக்கும், மருத்துவமனை களுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால், அவர்கள் பக்கம் நின்று கடைசி வரை போராடுவோம் என்றார்.

  ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை உள்பட மேலும் பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்து வமனைகள், பிறகு தனியார் மருத்து வமனைகளில் மகப்பேறு மருத்து வராக பணியாற்றி ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவம் பார்த்துள்ள டாக்டர் கே.விஜய குமாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் மகப் பேறு மருத்துவராக பல ஆண்டுகள் பணியாற்றி  காஞ்சிபுரத்தில் உள்ள அரசினர் அண்ணா புற்றுநோய் மருத்து வமனையில் பணியாற்றியபோது ஆரம்பநிலையிலேயே புற்றநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய டாக்டர்.ஜெயா சாம்பமூர்த்திக்கு இந்த கருத்தரங்கில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர்கள் சங்க (காக்ஸ்) தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் உமையாள் முருகேசன், பொருளாளர் கிருத்திகா தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.