சென்னை, செப். 4 - கொரோனா காலத்தில் பாஜக வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் நேரு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 63 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் இறந்த னர். மருத்துவமனைக்கு தேவை யான ஆக்சிஜனை வெளியில் வாங்கியதாலும், ஆக்சிஜன் கொள் முதலில் உள்ள முறைகேட்டை அம்பலப்படுத்தியதாலும் டாக்டர் கபீல்கான் சிறையில் அடைக்கப் பட்டு, பணி நீக்கமும் செய்யப்பட் டார். இந்த கோரக்பூர் மக்களவை தொகுதியிலிருந்துதான் யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளு மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதனையடுத்து சிறையில் அனுபவித்த கொடுமைகள், அது தொடர்பான நிகழ்வுகளை டாக்டர் கபீல் கான் புத்தகமாக எழுதியுள் ளார். ஆங்கிலத்தில் வந்த புத்த கத்தை மொழிப்பெயர்ப்பாளர் ச. சுப்பாராவ் தமிழாக்கம் செய்துள் ளார். ‘கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்: ஒரு மருத்துவரின் நினைவலைகள்’ என்ற தலைப்பில் இந்த நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (செப்.3) சென்னையில் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்று மை மேடை ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் நூலை நீதியரசர் அரி பரந்தாமன் வெளியிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், “சிறைக்கு செல்லும்போது கபீல்கான் டாக்டராக இருந்தார். சிறையில் இருந்து வெளியே வரும்போது எழுத்தா ளராகவும் அவர் மாறியிருந்தார். ஆக்சிஜன் இல்லாததால் நிகழ்ந்த மர ணத்தை யோகி ஆதித்யநாத் அரசு மறைக்க முயன்றது. அதை தனது போராட்டத்தின் மூலம் கபீல்கான் வெளிக்கொண்டு வந்தார். நீதி மன்றத்தில் உண்மையை ஒப்புக் கொள்ளவும் செய்தார். அவரது குடும்பம் கபீல்கானுக்கு உறுதுணை யாக இருந்தது” என்றார். தலைமை கணக்காயர் (சிஏஜி) அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகள் குறித்து பேசிய அவர், “கபீல்கான் போன்ற மருத்துவப் போராளிகள் இருக்கும்வரை, மதச்சார்பின்மைக்கான, மக்கள் ஒற்றுமைக்கான, தேசபக்த போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியும்” என்றார்.
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவா ஹிருல்லா, “கபீல் கான் நூலை ரஜினி படித்திருந்தால், யோகி ஆதித்ய நாத் காலில் விழுந்திருக்கமாட்டார். ஊழலற்றவர்கள் எனும் பாஜக வினரை அம்பலப்படுத்தவேண்டும். பிரதமர் மோடி, உ.பி.முதலமைச் சர் யோகி இருவரும் ஊழல்வாதி கள்தான் என்பதை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.
அரிபரந்தாமன்
நீதியரசர் து.அரிபரந்தாமன் குறிப்பிடுகையில், “போராட்டத்தின் அடையாளமாக இந்த புத்தகம் திகழ்கிறது. மோடி வீழ்த்தப்படுவார். ‘இந்தியா’ அவரை தோற்கடிக்கும்” என்றார்.
அந்தக் குடும்பங்கள் நீதிக்காக காத்திருக்கின்றன
ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் கான் தனது உரையில், 2017இல் கோரக்பூர் மருத்துவமனை சோகம் பற்றி கேட்கும் போது மக்களின் மனதில் இரண்டு முகங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் என்றார். “எல்லோரும் ஆதித்யநாத் மற்றும் டாக்டர் கான் பற்றி நினைக்கிறார் கள். ஆனால் இறந்த 63 குழந்தை கள் மற்றும் 18 பெரியவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் களைக் காப்பாற்ற முடியாமல் போன தற்கு வருந்துகிறேன். அந்த குடும்பங்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றன. அந்த குழந்தை களை பற்றி யாரும் பேசுவதில்லை, ஏனென்றால் அவர்கள் அனை வரும் ஏழைகள், ”என்றும் அவர் கூறினார். கோரக்பூர் மருத்துவமனையின் கோரமான நிகழ்வு குறித்து புத்த கத்தை வெளியிட எந்த பதிப்பகமும் தயாராக இல்லை என்றார். இந்த சோகமான நிகழ்வுக்கு முன்பு “ஒரு மருத்துவராக, நான் வேறுஒரு உலகில் வாழ்ந்தேன். என் தந்தை ஒரு பொறியாளர். என் அம்மா ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் இருந்து வந்த வர். நான் நன்றாக வேலை செய்த பிறகும், உயர் கல்வியைப் பெற்ற பிறகும், ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தாலும், தண்டிக்கப்பட லாம் என்பதை சிறையில் இருந்த போது உணர்ந்தேன்.
அநீதிக்கெதிராகப் போராட...
ஒரு இந்தியக் குடிமகனாக, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அப்போது முடிவு செய்தேன். வாழ்க்கை எனக்குப் பல பாடங் களைக் கற்றுத் தந்திருக்கிறது. சிறை யில் இருந்து வெளியே வந்ததும் பேச அழைப்பு வர ஆரம்பித்தது. நமது சுகாதார அமைப்பு ஏற்க னவே சீர்குலைந்த நிலையில் இருந்தது. COVID-19 இன் இரண்டா வது அலை அதை அம்பலப்படுத்தி யது, ”என்று அவர் கூறினார். மருத்துவ சேவையை அடிப்படை உரிமையாகக் கருதி போராடப் போவ தாக டாக்டர் கான் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் தலைமை தாங்கி னார். பாரதி புத்தகாலயம் க.நாக ராஜன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், சென்னை மக்கள் ஒற்றுமை மேடைஒருங்கிணைப் பாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.