புதுதில்லி, நவ. 2 - கேரள சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை பரி சீலனை செய்வதில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தேவையற்ற தாமதம் செய்வதாகக் கூறி கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 200-ஆவது பிரிவின் கீழ் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்ட 8 மசோதாக்கள் மீது ஆளுநர் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இந்த 8 மசோதாக்களில் 3 மசோதாக் கள், 2 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3 மசோதாக்கள் ஓராண்டுக்கு மேலாக வும் ஆளுநரால் நிலுவையில் வைக்கப் பட்டு உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. குறிப்பாக, “பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா (1வது திருத்தம்)-2021, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா (2வது திருத்தம்)- 2021, (ஆ.ப.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் -மால்) ஆகியவை 23 மாதங்களாகவும், கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா- 2022 (மில்மா) - 14 மாதங் களாகவும், கேரள லோக் ஆயுக்தா திருத்த மசோதா- 2022, 12 மாதங்களாகவும், பொது சுகாதார மசோதா- 2021, 5 மாதங்களாகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் மனுவில் கூறியிருக்கும் கேரள அரசு, சட்டமன்றம் நிறைவேற்றிய 8 மசோதாக்களை பரி சீலிப்பதில் நியாயமற்ற காலதாமதத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஆளுநர் தனது அரசியலமைப்பு கடமைகளில் தவறி விட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளது. “ஆளுநரின் நடவடிக்கைகள், கேரள மாநில மக்களின் உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலனுக்காக இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தும் ஆளுநரின் நடத்தையானது, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட நமது அரசியலமைப்பின் அடிப்ப டைகள் மற்றும் அவற்றின் விழு மியங்களை அழிப்பதாக, அவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மசோதாக்கள் மூலம் மக்களுக்கு சென்றுசேரவிருந்த நலன் களை தடுத்துள்ளது” என்று கூறி யுள்ளது. மேலும், “மாநில சட்டமன்றம், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், விவாதித்து நிறைவேற்றும் மசோதாக்களை, பொது நலன் கருதி விரைவாக சட்டமாக மாற்றுவது மாநில நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலையில், மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளு நருக்கு உத்தரவிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. “அரசியலமைப்பின்படி சட்டப்பேர வை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக் களை காரணமின்றி ஆளுநர் தாமதப் படுத்த முடியாது” என்று தெரிவித் திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் ஆளுநரின் போக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படியே தற்போது கேரள அரசு வழக்கு தொடரப் பட்டுள்ளது.