states

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்

டெல் அவிவ், நவ. 22 - இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நான்கு நாட்களுக்கு மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்வது என ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான போர் நிறுத்தத்திற்கான ‘முதல் படி’யே இந்த நான்குநாள் போர் நிறுத்தம் என்று அமெரிக்கா - இஸ்ரேல் - காசா ஆகிய மூன்று தரப்பினருடன் மத்தியஸ்தம் மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது.  இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ள இரு தரப்பும் கைதிகள் சிலரை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பெண்கள் என 150 பாலஸ் தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும், ஹமாஸ் வசம் உள்ள 50 பணயக்கைதி களை விடுவிக்க ஹமாஸ் குழுவும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இந்த போர் நிறுத்த நாட்களில் அதிகப்படியான உணவு, குடிநீர், மருந்து கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் காசா பகுதிக்குள் கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. “பலநாட்கள் நீடித்த மிகவும் கடினமான சிக்கலான பேச்சுவார்த்தைக்குப் பின், இதை நாங்கள் அறிவிக்கிறோம், அனைவருக்கும் மேலான கடவுளின் உதவியால், நாம் ஒரு தற்காலிகமாக நான்கு நாட்களுக்கான மனி தாபிமான போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டியுள்ளோம். இது கத்தார் மற்றும் எகிப்தின் பாராட்டுக்குரிய விடாப்பிடியான முயற்சிகளுக்கு கிடைத்த பலன். பொறுமை யாகவும், உறுதி குலையாமலும் இருந்த பாலஸ்தீன மக்களின் மீது எங்களுக்குள்ள பொறுப்பின் அடிப்படையில், நமது பெருமைமிகு காசாவின் கதாநாயகர்களின் உறுதி குலையாத் தன்மைக்கும், ஓய்வறியா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. நமக்கு சற்று ஆசுவாசம் ஏற்ப்படுத்திக் கொள்ளவும், நமது காயங்களை ஆற்றவும்,

யூத இன வெறி பிடித்த எதிரிக்கு எதிராக அக்டோபர் 7 அன்று நமது இயக்கம் பெற்ற வெற்றி களை மேலும் உறுதி செய்யவுமே இந்த போர் நிறுத்தம்” என ஹமாஸ் அமைப்பு தனது போர் நிறுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல, “இந்த போர் நிறுத்தம் முடிவு  அல்ல; 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் தாக்கு தலை நடத்துவோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் கூறியுள்ளார். தற்காலிகமாக இருந்தாலும், இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள்  மற்றும் சர்வதேச அமைப்புகள் வரவேற்றுள்ளன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் புதனன்று 47வது நாளை எட்டிய நிலையில், அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் மூலமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நிர்ப்பந்தம் அளித்து போரை  நிறுத்தச் செய்வதற்கான முயற்சிகளை சீனா துவங்கியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் கத்தார் மேற்கொண்ட முத்தரப்பு மத்தியஸ்தத்தின் பேரில், அமெரிக்காவின் ஒப்புதலுடன் இஸ்ரேல் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டது. ஹமாஸ் அமைப்பும் அதனை ஏற்றுக் கொண்டது. இந்தப் பின்னணியிலேயே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வியாழன் முதல் அமலுக்கு வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில், கடந்த 40 நாட்களில் மட்டும் 5,600 குழந்தைகள் உட்பட 14 ஆயிரத்து 100-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உடலுறுப்புகளை இழந்துள்ளனர்.