states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத் போலீஸ் மசோதாவுக்கு ஒப்புதல்

அகமதாபாத், ஜன. 4- சிஆர்பிசி (CrPC) பிரிவு 144-இன் கீழான தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா குஜ ராத் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டிருந்த நிலை யில், இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு ஒப்புதல் அளித்துள் ளார். சட்டப்பிரிவு 144-இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை  உத்தரவுகளை மீறுவது ஐபிசி பிரிவு 188-இன் கீழ் குற்றமாக கருதப்படுவதால், அதிகபட்சமாக 6 மாத சிறைத் தண்டனை வரை வழங்கப் படும் என்பது குறிப்பிடத் தக்கது.

தனிமைப்படுத்தலை திரும்பப் பெற்ற கர்நாடகம்

பெங்களூரு, ஜன. 4- சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லா ந்து, தென் கொரியா ஆகிய 7 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கும் சுற்றறி க்கையை கர்நாடக மாநில  சுகாதாரத்துறை திரும்பப்  பெற்றுள்ளது. வெளி நாட்டுப் பயணிகளின் கட்டுப் பாடு இனி ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் படியே பின்பற்றப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அவசரமாக தரையிறங்கிய விமானம்

புதுதில்லி, ஜன. 4- பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்ல 210 பயணி களுடன் ஏர் இந்தியா விமா னம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் புதனன்று மதியம் 1:28 மணிக்கு புறப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரண மாக அடுத்த சில நிமிடங் களில் அவசர அவசர மாக தரையிறங்கியது. 210 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டனர்.

ஓ.பி.எஸ்.,  இ.பி.எஸ். என்றால் என்ன?

புதுதில்லி, ஜன. 4- அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதி மன்றத்தில் புதனன்று நடை பெற்றது. அப்போது ஓ.  பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என பெயர் களைக் குறிப்பிடாமல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என குறிப்பிட்டு இருதரப்பு வழக் கறிஞர்களும் வாதங்களை முன்வைத்தனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் என இருதரப்பு வழக்கறிஞர்களிடமும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கள், முழுப் பெயரைக் குறிப்பிட்டு வாதிடுமாறு அறிவுறுத்தினர்.

சித்தூரில் தடியடி: தெலுங்குதேசம் பெண் தலைவர் காயம் 

சித்தூர், ஜன. 4- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை வர வேற்க திரண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் மீது போலீ சார் தடியடி நடத்தினர். தடியடியில் பெண் தலைவர் ஒருவர் பலத்த காயத்துடன் கவலைக்கிடமான நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் உரைக்கு  அமைச்சரவை ஒப்புதல்

சென்னை, ஜன.4- தமிழக சட்டபேரவையில் ஆளுநர் ஆற்ற உள்ள உரைக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இந்த முறை, அவர் தமிழில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரபுப்படி, ஆளுநர் உரையில் இடம் பெறும் கருத்து கள், திட்டங்களுக்கு தமிழக அமைச்சர வையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்தும் உரையில் இடம் பெறும் அரசின் கருத்துகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்ச ரவை கூட்டம் புதனன்று  காலை நடைபெற்றது. இதில் ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக மாநில பேருந்து ஓட்டுநர் சிதம்பரத்தில் மரணம் 

கடலூர், ஜன.4-  கர்நாடகா மாநிலம் சாம்ராட் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (40) இவர் கர்நாடகா மாநில அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 50 பேரை அரசு பேருந்தில் அழைத்துக்  கொண்டு வந்துள்ளார் . இவர்கள் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில் களை பார்வையிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செவ்வாயன்று (ஜன.3) இரவு வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பேருந்தில் வந்த வர்களை இறக்கி விட்டுவிட்டு பேருந்து ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்த  நிலையில் தூங்கி உள்ளார்.புதனன்று (ஜன.4) அதிகாலையில் பேருந்தில்  ஏறியவர்கள் ஓட்டுநரை எழுப்பியபோது  ஓட்டுநர் மயக்கம் அடைந்த நிலை யில் இருந்துள்ளதால் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார்  என்று தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுசொத்துக்களை நாசமாக்கும் புதுச்சேரி அரசு : நாராயணசாமி சாடல்

புதுச்சேரி,ஜன.4- அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகளில் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது குறித்து பிரதேச  காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்புர மணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வள்ளலார் சாலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.  பாஜக உடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்வதற்கு முக்கிய காரணம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு தான் என்று   தேர்தல் நேரத்தில் முதல்வர் ரங்கசாமி  கூறினார். அப்படி மாநில அந்தஸ்து  பெறுவதற்கு அனைத்து கட்சிகளின்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, தில்லிக்கு அழைத்து சென்று மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் அதற்கான நடவடிக்கைகளை இது வரை முதல்வர்  ரங்கசாமி எடுக்கவில்லை. உண்மை யில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பாஜகவை எதிர்த்து தெருவில் போராட வேண்டும். அதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு தைரி யம் இருக்கிறதா? பள்ளிகள்  கோவில்கள் குடியி ருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பார், மதுபார்களுக்கு அனுமதி வழங்கி யிருப்பதை திரும்பபெறவேண்டும். அரசு சொத்துக்களை தனியார் மயமாக்கும் வேலைகளில் இந்த அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதை மக்களிடம் விலக்க வேண்டும் என்று தனது கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம் எம்.பி உட்பட பலர் பங்கேற்றனர்.

கேள்வி கேட்ட செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

சென்னை, ஜன.4-  பாஜக தலைவர்கள் மீதான காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய செய்தி யாளர்களுடன் பாஜக தலை வர் அண்ணாமலை வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை புதனன்று  (ஜன.4) செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லை”  என்று பாஜகவில் இருந்து  விலகிய காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியது தொடர் பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது  அனைவரும் தான் விமர்ச னம் வைக்கிறார்கள். அதற் கான பதில் என்னுடைய மவுனம் தான் என்றார். திமுகவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரி யம் உள்ளதா? என்று  எப்போதும் பேசுவதை போல் பேசினார்.  கேள்வி  கேட்ட செய்தியாளர்களுக்கு பதில் சொல்லாமல் “ நீங்கள்  எந்த சேனல்? நீங்கள் எந்த சேனல்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச  வேண்டாம் என்று தெரிவித் தார். இதன்பிறகு கேள்வி கேட்பவர்களிடம் சேனல் பெயர், உங்களின் பெயர் சொல்லுங்கள் என்று வாக்குவாதம் செய்தார். மாநில அரசின் விளம்பரம் வாங்குவதற்காக இப்படி கேள்வி கேட்பதாக சில செய்தியாளர்களை பார்த்து அவர் கோபத்துடன் கத்தி னார். இதனால் அண்ணா மலைக்கும் செய்தியாளர்க ளுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

“தலையீட்டுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி”

மெக்சிகோ சிட்டி, ஜன.4- பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்கப் போவதாக மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(அம்லோ) தெரிவித்துள்ளார். வட அமெரிக்க நாட்டுத் தலைவர்களின் உச்சிமாநாடு மெக்சிகோவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆகியோரும் பங்கேற்கவிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒருங்கிணைப்பை வட அமெரிக்காவில் ஏற்படுத்துவது பற்றி இந்தத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளார்கள். இந்த மாநாட்டில், கடந்த 200 ஆண்டுகளாக பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு வரும் அமெரிக்காவின் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்  கோரப் போவதாக அம்லோ கூறியிருக்கிறார். 1800களின் தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த  ஜேம்ஸ் மன்ரோ உருவாக்கிய இந்தக் கொள்கை தற்போதும் தொடர்கிறது என்று கூறிய அம்லோ, “அனைத்து அமெரிக்க நாடுகளிலும் தலையிடுகிறார்கள். இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை அமைக்கவே இப்படிச் செய்கின்றனர்” என்றார். வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பொருளா தார ரீதியில் ஒருங்கிணைத்து, முன்னேற்றத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை உச்சி மாநாட்டில் அம்லோ வைக்கப் போகிறார். தென் அமெரிக்க நாடுகளின் சுயாட்சி மற்றும் சுய முடிவுகள் எடுக்கும் உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் என்று அம்லோ தெரிவித்திருக்கிறார்.

 

உலகச் செய்திகள்

 

ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைமைப் பொறுப்பை ஸ்வீடன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆறு மாத காலத்திற்கு இந்தப் பொறுப்பை அந்நாடு வகிக்கும். கடந்த ஆறு மாதகாலம் செக் குடியரசு தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தது. தங்களது காலத்தில் பாதுகாப்பு, வளர்ச்சி, ஜனநாயக மாண்புகள் மற்றும் சட்டப்படியான நிர்வாகம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப் போவதாக ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டெர்சன் அறிவித்துள்ளார். கடுமை யான சவால்களை ஐரோப்பிய ஒன்றியம் சந்தித்து வரும் சூழலில் தங்களுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஊர்வலங்கள் எதையும் நடத்தக்கூடாது என்ற தடை எதிர்க்கட்சிகள் மீது விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை தான்சானியாவின் ஜனாதிபதி சமியா சுலுஹு ஹாசன் விலக்கிக் கொண்டுள்ளார். இவருக்கு முன்பாக ஜனாதிபதியாக இருந்த ஜான் மகுஃபுலி, 2015 ஆம் ஆண்டில் இந்தத் தடையைக் கொண்டு வந்தார். “பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமையாகும்” என்று ஹாசன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடையாததால் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு பிரிட்டன் ரயில்வே தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் போராட்டங்களைத் தள்ளி வைத்த ரயில் தொழிலாளர்கள், பணிப்பாதுகாப்பு, ஊதியம் மற்றும் பணியிடச் சூழல்கள் ஆகியவை குறித்த கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறார்கள். மேலும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாத நிறைவிற்குள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.