சென்னை, ஜூன் 22- தமிழ்நாட்டில் மயானங்களை நன்கு பராமரித்து பூஞ்சோலை யாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக் கும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கேட்டுக்கொண்டுள் ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உயிரிழந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்வதற்கு, சுடு காடுகளில் வரக்கூடிய பொது மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மயானங்களில் அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நட்டு பசுமையான மயானங்கள் உரு வாக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் வசதி சுற்றுச்சுவர் போன்றவை களையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். மயானங்கள் சரிவர பரா மரிக்கப்படவில்லை என்று புகார்கள் வருகிறது. எனவே மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளார்.