சென்னை, அக்.16- திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் அனுராதா கைது செய்யப்பட்டதால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்த வர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று (அக்.16) வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:- திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது. அதாவது ஒரு பெண் இரண்டு குழந்தை கள் பெற்ற பிறகு, மூன்றாவதாக பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களது ஏழ்மை நிலையினை கருதி அவர் களுக்கு ஆசை காட்டி, ஆண் குழந்தை என்றால் ரூ.5000 என்றும், பெண் குழந்தைகளாக இருந்தால் ரூ.3000 என்றும் விற்பதற்கான பணிகளை தரகர்கள் செய்கிறார்கள் என்ற செய்தி பரவியது. இந்த செய்தி கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் உமா , சம்பந்தப்பட்ட காவல்துறை அலு வலர்கள் ஆகியோரோடு ஐந்து நாட்களாக ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட வருடங்களாக லோகம்பாள் என்ற பெண் இடைத்தரகர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர் குழந்தைகளை திருடி விற்கவில்லை, தாய்மார்களின் ஏழ்மை நிலையினை ஆசை காட்டி அவர்களுக்கு பிறந்த 3வது குழந்தைகளை வேறு யாருக்காவது விற்று தரும் வேலையை செய்திருக்கிறார்.
இந்த சம்பவங்களுக்கு மருத்துவர் அனுராதா என்ற மகப்பேறு மருத்துவர் உடந்தையாக இருந்திருக்கிறார். இம்மருத்துவர் அதற்கு உடந்தையாக இருந்ததால் பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருச்செங்கோடு மருத்துவமனையில் மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளதா? அல்லது இதில் பெரிய அளவில் ஏதாவது குழு ஒன்று செயல்பட்டு வருகிறா? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இவர்கள் இரண்டு பேரை தீவிரமாக விசாரணை செய்ததில் சிறுநீரகம் விற்பனையும் கூட நடந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே அதனையும்கூட விசாரணை செய்வதற்கு காவல் துறை உயர் அலுவலர்களையும், மருத்துவத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஒரு குழு அமைத்து தீவிரமாக விசாரணை செய்ய சொல்லியிருக்கி றோம். இந்த விசாரணைகளுக்குப் பிறகு இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று முழுமை யாக கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாக வும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இதற்கிடையில், மருத்துவர் அனுராதா, இடைத் தரகர் லோகாம்பாள் இரு வரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணி கள் இயக்குநரிடம், மருத்துவர் அனுராதாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.