சென்னை, ஏப்.5- தமிழ்நாடு சட்டப்பேர வையில் புதனன்று (ஏப்.5) கேள்வி நேரம் முடிந்ததும் காவிரி டெல்டா பகுதிக ளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப் பதற்கான ஏல அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு கொண்டு வரப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதன் சுருக்கம் வருமாறு: நீங்களெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, அதற்குப்பிறகு உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன். அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், திமுக தலைவர் . டி.ஆர்.பாலு விடம் அந்தக் கடிதத்தின் நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச் சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகை யில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அவரிடம் தரவேண் டுமென்று கூறினேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் வெளியூரில் இருப்ப தால் நேரில் சந்திக்க முடியாமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக் கிறார். அவருடன் பேசியபோது, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம்; கவலைப்பட வேண்டாம்” என்ற ஓர் உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொல்லியிருக் கிறார். முதலமைச்சராக மட்டு மல்ல; நானும் டெல்டா மாவட்டத் தைச் சேர்ந்தவன். எனவே, இதில் நான் உறுதியாக இருப் பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக் காது; அளிக்காது; அளிக்காது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.