- ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரி மராத்தியர்களை இழிவுபடுத்தியதால் மக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. கோஷ் யாரி மதத்தின் அடிப் படையில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சித்து, வரம்பை மீறி செயல்பட்டு வருகிறார். அவரை வீட் டுக்கு அனுப்புவதா அல் லது சிறைக்கு அனுப்பு வதா என்பதை மராத்திய மக்கள் முடிவு செய்வார் கள் என மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழும் “குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்கள்” குறித்த ஆளுநர் கோஷ் யாரியின் சர்ச்சை கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தலைவர் உத் தவ் தாக்கரே பேச்சு.
- ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துக்கட்சி கூட் டத்துக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஏற்க னவே அழைப்பு விடுத் துள்ள நிலையில், தற் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடி தம் எழுதியுள்ளார்.
- தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் (பட்டம் விட பயன் படும்) விற்பனை தொடர் பாக தில்லியில் 20க்கும் மேற்பட்டோரை அம் மாநில போலீசார் கைது செய்தனர்.
- இராக் நாட்டில், ஈரான் ஆதரவு குழுக்களின் தலைமையிலான அர சாங்கத்தை அமைக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாம் மதத்தின் ஷியா பிரிவை பின்பற்றுபவர்கள் அந் நாட்டு நாடாளுமன் றத்தை சனியன்று முற்று கையிட்டனர்.
- உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா மாநில சட்ட மேலவை இடைத்தேர்த லுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக சனியன்று வெளியிட் டது.
- வர்த்தகம், சுற்றுலா மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் வெனிசுலாவும், பொலிவியாவும் உடன்பாடுகளில் கையெழுத்திட் டுள்ளன. கலகத்தின் மூலம் இவோ மொரேல்ஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு இரு தரப்பு உறவு மோசமாகியிருந்தது. தற்போது மீண்டும் இடதுசாரி கள் பொலிவியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. இரு நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
- ஜப்பானின் கடல் எல்லையில் தென் கொரிய ராணுவம் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளது. ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் டோக்டோ தீவுகள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை இருந்து வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த தீவுகளுக்கு அருகில்தான் தனது ராணுவப் பயிற்சியில் தென் கொரிய ராணுவம் ஈடுபட்டுள் ளது. ஜூலையின் தொடக்கத்தில் கூட அந்த தீவுகள் தங்களுக்குச் சொந்தமானதுதான் என்று ஜப்பான் வலியுறுத்தியிருந்தது. இரு தரப்பு உறவுகளை இந்த நிலைப்பாடு பாதிக்கும் என்று தென் கொரியா பதில் அளித்திருந்தது.
- ஒரே சீனம் என்பதை தாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடிய ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி இதைத் தெரிவித்திருக்கிறார். தன்னிச்சையாகத் தொடர்ந்து அமெரிக்கா அழிவுப் பாதையில் நடக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் நடவடிக் கைகள் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.