states

பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி அமைச்சரை பேச அனுமதிக்காமல் ஆளுநர் அடாவடி

கோவை, ஆக.24- கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு பேசுவ தற்கான வாய்ப்பு வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக 38 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் ஆகஸ்ட் 24 வியாழனன்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில், பல்கலைக்கழக இணை வேந்தரும், மாநில உயர்கல்வித்துறை அமைச்சரு மான க.பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவில் பொது பாட முறை குறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச திட்டமிட்டு இருந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற பிரதமரின் சிறப்பு பொரு ளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யாலை மட்டும் பேச அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பேச அழைக்கவில்லை. தமிழ்நாடு ஆளுநரும் பேசாமல் மாண வர்களுக்கு பட்டங்களை மட்டும் வழங்கி விட்டு கிளம்பிச்சென்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டா ரங்கள் கூறுகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுவதாகத்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரையிலான திட்டமிடல் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் படி வத்தில் அமைச்சர் பேசுவதற்கான நேரம் குறித்து விடுபட்டிருந்தது. அப்போதுதான் நாங்களே அதனை கண்டு அதிர்ச்சிய டைந்தோம். இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று தெரி வித்தனர். நீட் மற்றும் மாநில அரசின் பொது பாடத்திட்டம் போன்றவற்றில் தமிழக அரசின் முடிவிற்கு எதிராக தமிழக ஆளுநர் இருந்து வருகின்றார். இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் பொது பாடத் திட்டத்தை பின்பற்ற வேண்டியது இல்லை என இரு தினங்களுக்கு முன்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றறிக்கை அனுப்பினார். கடந்தாண்டு பாரதியார் பல்கலைக்கழ கத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், எந்த  மொழியையும் கற்க தயாராக இருக்கின் றோம். அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழி யான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கின் றது. இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானி பூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்றார். அப்போது அது சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது நீட் விவகாரம், பொது பாட முறை விவகாரம் என ஆளு நரின் கருத்துகளுக்கு எதிராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பேசுவதற்கான வாய்ப்பை ஆளுநர் கொடுக் காமல் தட்டிக்கழித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.