states

உறவினர்களுக்கு நியமனம் கோரி ஆளுநர் கடிதம் கேரள மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

திருவனந்தபுரம், நவ.22- ஆளுநர் மாளிகை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருப்பது கேரள ஆளுநரின் இரட்டைப் போக்கை எடுத்துக்காட்டு வதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசுப் பணிகளில் மறைமுக நியமனம் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ஆளுநர், தனது அலுவலகத்தில் 5 ஆண்டு கள் கூட அனுபவம் இல்லாத ஊழியர்களை நிரந்தரம் செய்ய வும், நிரந்தரப் பணி நியமனத்துக்கு புதிய பதவியை உருவாக்க வும் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது புகைப்  படக்காரரை நியமனம் செய்ய புதிய பணியிடத்தை உருவாக்க வும் கோரியுள்ளார். அமைச்சர்களின் தனிப் பணியாளர் நியமனத்தைக் கூட  சந்தேகத்தின் நிழலில் ஆக்கியும், அவர்களது ஓய்வூதியத் தைக்கூட ஒழித்துக்கட்டவும் வேண்டுமென்றே பொய்ப்  பிரச்சாரம் செய்த ஆளுநர், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பி னார். கேரள ஆளுநர், அரசியல் இலக்குகளை மட்டுமே மன தில் கொண்டு கேரள அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது இந்தக் கடிதத்தின் மூலம் மிகத் தெளிவாகத் தெரி கிறது. எனவே, நீண்டகாலமாக அரசுக்கு எதிராக மேற்கொள் ளப்படும் பொய்ப் பிரச்சாரத்துக்கு கேரள மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆளுநர் அனுப்பிய கடி தம் அதிகார அத்துமீறலா அல்லது ஊழலா என்ன என்பதை  ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேரள மாநில  செயற்குழுவின் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.