சென்னை,பிப்.20- கொரோனா தொற்றால் உயிரிழந்த, அரசு மருத்துவர்கள் குடும்பத்திற்கு நிதியும் விவேகானந் தனின் மனைவிக்கு உடனடியாக அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்று தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 10 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இது வரை மாநில அரசு நிவாரணமாக 10 காசு கூட தரவில்லை என்பது வருத்த மளிக்கிறது. அந்த 10 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே அரசு வேலை கேட்கிறது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை யில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக பணியாற்றி மருத்துவர் விவேகானந்தன் கொரோனா காலத்திலும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார். 22.11.2020 அன்று உயிரிழந்த போது,
அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த நமது முதல்வர், விவேகானந்தனின் குடும் பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் தர வேண்டும். மேலும் அவரது குடும்பத்துக்கு உடனடியாக அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அன்றைய அதிமுக அரசிடம் வலியுறுத்தினார். ஆட்சி மாற்றத் திற்கு பின்னர், அவரது குடும்பத் திற்கு கருணை அடிப்படையில் ஒரு வேலை கூடவா தரக் கூடாது? இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 25.11.22 அன்று திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். இருப்பினும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில், அரசு ஊழி யர்கள் பணிக்கு வராத நாட்களை, பணிக்காலமாக அறிவித்து, அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தி னருக்கு, அரசு நிவாரணம் வழங்கு வதோடு, மருத்துவர் விவேகானந் தனின் மனைவி திவ்யாவுக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க முதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.