ஈரோடு, நவ.5- ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அள விலான தடகள போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், மீண்டும் தகுதிச்சுற்று போட்டி களை நடத்தி தனியார் பள்ளி மாணவர்களை தேர்வு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.முரு கேசன். இவரது இளைய மகன் மு.லெனின் ஜீவா என்பவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரு கிறார். இவர் பள்ளிகள் அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்று வருகிறார். இந்நிலையில், ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பன்னாரி அம்மன் கல்லூரியில் கடந்த அக்.20,21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வட்டு எறிதல் போட்டியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யின் சார்பில் மு.லெனின் ஜீவா பங்கேற்று, 33.72 மீட்டர் வட்டு எறிந்து, இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மழையின் கார ணமாக இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டது.
அதன்படி கடந்த அக்.31 ஆம் தேதியன்று இறுதிப் போட்டியை நடத்தாமல், மீண்டும் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆ.மு. திருமாவளவன் எழுத்துப்பூர்வ ஆட்சேபம் தெரி வித்துள்ளார். எனினும் அவரது ஆட்சேபணை யை பொருட்படுத்தவில்லை. ஏற்க னவே நடைபெற்ற தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதிபெற்ற மாணவர்களை மட்டுமே வைத்து போட்டி நடத்தப்படாததால், முதலிடத்திலிருந்த மு.லெனின் ஜீவா மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அரசுப் பள்ளி மாணவரான மு.லெனின் ஜீவாவின் தந்தையும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளருமான ஆர்.முருகேசன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறை அதி காரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
அக்.31 ஆம் தேதியன்று 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வட்டு எறிதல் போட்டியை நடத்திய நிர்வாகத்தார், இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற எட்டு மாணவர்களை மட்டும் வைத்து போட்டியை நடத்தாமல் மீண்டும் தகு திச்சுற்று போட்டிகளை நடத்தியது உள்நோக் கம் கொண்டதும், இயற்கை நியதிக்கு எதிரான தும், விளையாட்டு விதிமுறைகளுக்கும் முர ணானதும் ஆகும். மேலும், மாவட்ட அளவில் அரசின் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளில் தெரிந்தே இதுபோன்ற விதிமீறல், குளறுபடி கள் செய்யும் செயல் என்பது அரசுப்பள்ளி மாண வர்களை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு சாதகமான ஏற்பாடாக இருக்குமோ? என்கிற இயல்பான சந்தேகம் எழுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உட னடியாக தலையிட்டு, விதிமுறைக்கு மாறாக நடத்தப்பட்ட மேற்கண்ட போட்டியின் முடிவு களை திரும்பப்பெற்று, அக்.21 ஆம் தேதி யன்று விதிமுறைப்படி இறுதிக்கு தேர்வு செய் யப்பட்ட எட்டு மாணவர்களை மட்டும் வைத்து போட்டியை நடத்தி நேர்மையான முடிவுகளை அறிவிக்க வேண்டும். மேலும், விதிமீறல், குளறு படிகளுக்கு காரணமானவர்கள் மீது தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தி உள்ளார்.