சென்னை,ஜூன் 12- சுற்றுச்சூழல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் சில அம்சங்கள் தமிழக மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மக்கள் ஏற்கனவே வசிக்கும் மக்க ளுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வழங்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான தீர்ப்பின் சில அம்சங்கள் பொது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள் ளது. வன விலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றள வுக்கு அதிகப்படுத்த வனத்துறைக்கு உத்தர விட்டுள்ளது. இந்தப் பகுதிக்குள் உள்ள கட்ட மைப்புகள் குறித்து மூன்று மாத காலத்திறகுள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், புதிதாக நிரந்தரமான கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் புதிதாக ஒரு கிலோ மீட்டர் விஸ்தரிக்கப்படு வதால் ஏற்கனவே அங்கு வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை கூட விஸ்தரித்துக் கட்டிக் கொள்ள முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. பட்டா நிலமாக இருந்தாலும் புதிய கட்டுமானங் களுக்கு இந்த தீர்ப்பில் தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட யானைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், வன விலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். இந்த தீர்ப்பு மக்கள் மத்தி யில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை புதிதாக விஸ்தரிப்பதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி யில் ஏற்கனவே வசிக்கும் மக்களுக்கு விதி விலக்கு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.