states

உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்கும் அரசாணை எண் 115ஐ ரத்து செய்திடுக!

திருப்பூர், நவ.8 - வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலை அளிப்ப தன் மூலம் அரசுத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும், பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருப்பூ ரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எ. ராணி தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டின் முடிவுப்படி அரசு ஊழியர்களின் கோரிக் கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாநிலம் தழு விய இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.  சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வரு வாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூல கர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி களில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152 ஐ உடனடியாக ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங் கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் மா. பாலசுப்பி ரமணியம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி, ராமன் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.