சென்னை, அக். 17 - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை (ஐஎப்எச்ஆர்எம்) கைவிட வலி யுறுத்தி செவ்வாயன்று (அக். 17) மாநிலம் முழுவதும் மாவட்ட கருவூல அலுவலகங்கள் முன்பு அரசு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் (ஐஎப்எச் ஆர்எம்) வாயிலாக அரசின் வரவு செலவு, ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிதி சார்ந்த பணிகள் நடை பெறுகிறது. ரூ.289 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை விப்ரோ நிறுவனம் செயல்படுத்துகிறது. ஆனால், இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனத்தை போன்று அரசு ஊழி யர்களை விப்ரோ நிறுவனம் கையாள்கிறது. எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். விப்ரோ நிறுவனத்திற்கு மாற்றாக அரசு நிறுவனமான நிக் வாயிலாக இதனை செயல்படுத்த வேண்டும். அரசு அறிவித்தபடி கட்டணமில்லா சிகிச்சை என்பதை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில், கருவூலக் கணக்கு துறை தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.கலைச்செல்வி தலைமை தாங்கி னார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாவட்டச் செயலாளர்கள் ம.அந்தோணிசாமி (வடசென்னை), த.முத்து குமாரசாமிவேல் (தென் சென்னை), வடசென்னை மாவட்ட பொருளாளர் த.ஏழுமலை உள்ளிட் டோர் பேசினர்.