states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் செவ்வா யன்று மாலை நிலவரப் படி, 75,811 மாணவ, மாணவியர் தங்களுக் கான இடங்களைத் தேர்வு  செய்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் 21,000 அரசு பள்ளி மாண விகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என  தமிழ்நாடு அரசு அறி விப்பு வெளியிட்டுள்ளது.

அரசுப் பல்கலைக்கழ கங்களின் துணைவேந் தர் நியமன விவகாரத் தில், இனி ஆளுநருக்குப் பதிலாக முதல்வரே துணைவேந்தரை நிய மிக்கும் பஞ்சாப் பல்கலை க்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2023 பஞ்சாப் சட்டப்பேரவை யில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான எஸ்தோனியா ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கு வதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. செவ் வாயன்று நாடாளு மன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்த முள்ள 101 வாக்கில் 56 வாக்குகள் ஓரினச்சேர் க்கை திருமணத்திற்கு ஆதரவாக பதிவானது. இதன் மூலம் ஓரினச் சேர்க்கை திருமணத் திற்கு அனுமதி அளித்த முதல் பால்டிக் நாடு என்ற பெயரை பெற்றது எஸ்தோனியா.  பால்டிக் நாடுகள் என்பது பால்டிக் கடலின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய 3 நாடுகள்ஆகும். 

நீலகிரி மாவட்டத்தில் திடீரென இடைவிடாமல் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக பெய்த கனமழையால் மாவட்ட த்தின் பெரும்பாலான பகுதி இயல்பு நிலையை இழந்தது.

சமூக வலைத்தளங்களில் ஆபாச, அவதூறு பதிவு கள் காரணமாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் உமா கார்கி யை 15 நாட்கள் சிறை யில் அடைக்க கோவை  நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோ ட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது நட வடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெயில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் மட்டும் இன்னும் வெயில் குறை யவில்லை. செவ்வா யன்று அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளை யங்கோட்டையில் 99.32 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

கோவில் விழாக்களில் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்தால் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப்பகுதியில் உள்ள ஜெனின் முகாமிற்குள் புகுந்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் உடனடியாக ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 22 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாகக் கிளம்பியிருக்கும் கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல் இத்தாலி சென்றடைந்துள்ளார். ரோம் நகர் விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிருந்து வாடிகன் செல்லும் அவர் போப்புடன் கலந்துரையாடுகிறார். இத்தாலி ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் அவர் சந்திக்கிறார்.

சுற்றுலாப் பயணங்களின்போது தனியாகச் செல்ல விரும்புகிறவர்களுக்கு பிடித்தமான  20 இடங்களை பிரிட்டனின் சுற்றுலா வழிகாட்டி நிறுவனம் ஒன்று பட்டியலிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் வியட்நாமின் ஹனோய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் பாங்காக், சீன தைபே, சியோல் மற்றும் ஃபினோம் பென் ஆகிய நகரங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் வியட்நாமின் தலைநகரான ஹோசிமின் நகரம் உள்ளது.