states

img

கார்ப்பரேட் நிறுவனங்களை முறைப்படுத்த அரசு செயலி

சென்னை, அக். 18 - கார்ப்பரேட் கம்பெனிகள் ஒழுங்கு படுத்தும் புதிய மோட்டார் வாகன சட்டம் (2019), அக்ரிகேட்டர் ரூலை அமல்படுத்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். கால்டாக்சி, போர்ட்டர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் அநியாய கொள்ளையை எதிர்த்து அக்.16-18 தேதிகளில் கால்டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக புதனன்று (அக்.18) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓலா, உபேர் போன்ற தமிழ்நாடு  அரசே ஒரு செயலி உருவாக்க வேண்டும். இதில், ஆட்டோ, டூரிஸ்ட் கேப், டாட்டா ஏஸ் ஆகிய வாகனங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். கார்ப் பரேட் நிறுவனங்களின் கொள்ளையி லிருந்து ஓட்டுநர்களை பாதுகாக்க ஆட்டோ, கால்டாக்சி, டாட்டா ஏஸ் வாகனங்களுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங் கும் வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டும், ரேபிடோ உள்ளிட்ட டூவீலர் டாக்சிகளை தடை செய்ய வேண்டும், ஓட்டுநர்களிடம் இருந்து 10 விழுக்காடு மட்டுமே நிறு வனங்கள் கமிசன் பெற உத்தர விட வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக் கைகளை வலியுறுத்தினர். சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு கால்டாக்சி ஓட்டுநர் சங்க பொதுச்செய லாளர் பூபதி உள்ளிட்ட பலர் பேசி னர்.