மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் வெள்ளியன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக வழங்கிய தங்க கவசத்தை பொருளாளர் சீனிவாசனிடம் வழங்கக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27 ஆகிய தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை வழங்க புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான தற்கும், காவல்துறைக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி துவாரகா பகுதியின் போச்சன்பூர் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய குற்றத்தில் ராகேஷ் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.