சென்னை, பிப்.24- தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சிறைச் சாலைகளுக்கு சலவை இயந்திரங்கள் (வாஷிங் மெஷின்) வழங்கப்பட்டுள் ளதற்கு முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: தென்னாப்பிரிக்காவில் 1913 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சத்தியாகிர கத்தின் போது பெரும் பேரணியில் பங்கேற்றதற்காக தில்லையாடி வள்ளியம்மாள் மற்றும் கஸ்தூரிபாய் மோகன்தாஸ் காந்தி ஆகியோர் மாரிட்ஸ்பர்க் சிறையில் மூன்று மாதங் கள் கடுமையான சிறைத் தண்டனை அனுபவித்தனர். “தென்னாப் பிரிக்காவில் சத்தியாகிரகம்” என்ற புத்தகத்தில் காந்திஜி, அப்பெண் களுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்தது
என்றும், சிறையில் அவர்களுக்கு சலவை செய்யும் வேலை வழங்கப் பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்விரு பெண்களும் கடினமான சூழ் நிலைகளில் வாழ்ந்து பழகியவர்கள் என்றாலும், கடுமையான வேலை இரு வருக்கும் சோதனையாக இருந்த தோடு மட்டுமல்லாமல் அவர்களது ஆரோக்கியத்தையும் பாதித்தது. 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி தில்லையாடி வள்ளியம்மாள் அவர்கள் காய்ச்சல் காரணமாக மரண மடைந்தார். கஸ்தூரிபா சிறையி லிருந்து விடுதலையான போது உடல் மெலிந்து காணப்பட்டதோடு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1944 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 22 அன்று ஆகாகான் அரண்மனை சிறை யில் உயிரிழந்தார். சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த சீர்திருத்த நிகழ்வை அதே பிப்ரவரி 22 ஆம் நாளில் பகிர்ந்து கொள்ள விரும்பிய தாக தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இனி சலவை இயந்திரங்கள் பயன் பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் நிலையான நடைமுறையாக இடம் பெறும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு தொடர்ந்து சிறைச் சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அந்தத் துறையில், குறிப்பாக பெண் சிறைவாசிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு முன்மாதிரி யாக திகழட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.