கூகுளின் தாய் நிறு வனமான ஆல்பாபெட் தனது நிறுவனத்தின் 12,000-க்கும் மேற்பட்ட வேலைகளை அல்லது பணியாளர்களில் 6%-ஐ நீக்குவதாக கூகுள் தலை மை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளி யன்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்ச லில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது சொந்த நகரமான குவாலியரில் கூட அரசியல் ரீதியாக தேவை யற்றவராக மாறிவிட்டார் என மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசியுள்ளார்.
இஸ்ரோவில் 1994-ஆம் ஆண்டு உளவு பார்க்கப் பட்ட விவகாரத்தில் குஜ ராத் முன்னாள் ஏடிஜிபி மற்றும் வழக்கில் தொடர்புடைய நபர் களுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
கடந்த 12 நாட்களாக உயர்ந்து கொண்டே சென்ற முட்டையின் விலை வெள்ளியன்று 20 காசுகள் சரிவடைந்த நிலையில், நாமக்கல் பண்ணைக் கொள்முதல் விலையில் ஒரு முட்டை ரூ.5.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து தில்லிக்கு 277 பயணி களுடன் வந்து கொண்டி ருந்த ஏர் இந்தியா டிரீம் லைனர் விமானம் எரி பொருள் பற்றாக்குறை காரணமாக வெள்ளி யன்று மாலை சென்னை யில் அவசர அவசரமாக தரையிறங்கியது.
ஜனவரி 28 அன்று நடை பெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக் கான ஹால்டிக்கெட் வெளியானது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதி விறக்கம் செய்துகொள்ள லாம்.
புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரிக்கு புதிய பேருந்து அர்ப்பணிக்கும் நிகழ்வுக்காக சட்டப்பேர வை வளாகத்திற்கு வந்த முதல்வர் ரங்கசாமியை, பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் வருகைக்காக காத்திருக்க சொன்னதால் கோப மடைந்து அலுவலகத்து க்கு திரும்பினார். அமைச்சர் நமச்சிவாயம் முதல்வர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங் களை ஜனவரி 11,12, 13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளி யிட்டதாக கூறி 34 திரை யரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சி யர் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார்.
பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கிய விக்கிர வாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
பெரும் பணவீக்க அதிகரிப்புடன் 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதாக இத்தாலியின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.1 விழுக்காடு அதிகமாக இருந்தது. 1999 ஆம் ஆண்டில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 2022 ஆம் ஆண்டில்தான் இவ்வளவு அதிகமான அளவு பணவீக்கம் காணப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் 1.9 விழுக்காடுதான் பணவீக்க அதிகரிப்பு இருந்தது.
நியூசிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்தும், தொழிலாளர் கட்சி யின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகப் போவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் பொதுத் தேர்தல் நடக்க வுள்ளது. அந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அவர் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த பிரதமர் யார் என்பதைத் தேர்வு செய்யத் தொழிலாளர் கட்சியின் கூட்டம் ஜன.22 ஆம் தேதியன்று நடக்கிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. 2023 ஆம் ஆண்டில் முதல் மூன்று நாட்களி லேயே மூன்று கறுப்பர்கள் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பலியாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில்தான் அதிக அளவில் இனரீதியிலான கொலைகளை காவல்துறை செய்தது. கடந்த ஆண்டில் மட்டும் 1,176 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் காவல்துறையின் அடக்கு முறைக்கு 30 ஆயிரத்து 800 கறுப்பர்கள் பலியாகியிருக்கின்றனர்.