தேனி, அக்.29- கூடலூர் அருகே தோட்டத் தொழிலாளியை வனத்துறை அதி காரி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்ப வத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அய்யர் தேவர் மகன் ஈஸ்வரன் (55). வயல்களுக்கு தண்ணீர் பாய்க்கும் காவலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், திருநாவுக்கரசு என்ற மகனும் லினோ என்ற மகளும் உள்ள னர். சனிக்கிழமையன்று இரவு ஈஸ்வரன் வண்ணாத்திப்பாறை ரிசர்வ் வனப்பகு திக்குள் வேட்டையாட முயன்றதாகவும் அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த வனத்துறையுடன் ஏற்பட்ட தகராறில் வனத்துறையினர் அவரை சுட்டுக் கொன்ற தாகவும் ஞாயிறன்று அதிகாலையில் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் சனிக்கிழமை இரவே காவல்துறை, வனத்துறை உயர் அதிகாரி கள் சம்பவ இடத்தையும், இறந்த ஈஸ்வர னின் உடலையும் பார்வையிட்டு, பின் அவர்களது உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்ததும் அதிர்ச்சி யடைந்த அவரது உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஞாயிறன்று காலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஈஸ்வரன் உடல் அங்கு இல்லாததாலும், தேனிக்கு கொண்டு சென்றது குறித்து அவர்களிடம் தகவல் தெரிவிக்காததாலும் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுக்குமாரி தலைமையில், டிஎஸ்பி சக்திவேல், கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா உள்ளிட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சாலை மறியலால் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கம்பம் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட ஈஸ்வரன் உறவினர்கள் தெரிவிக்கையில், வயல்வெளிக்கு தண்ணீர் கட்டும் வேலை செய்பவர். இவர் வேட்டையாடச் சென்றார் என்கிறார்கள். சம்பவம் சனிக்கிழமையன்று இரவு 9 மணிக்கு நடந்துள்ளது. உயர் அதிகாரிகள் அனைவரும் வந்து பார்த்து சென்றுள்ளனர். ஆனால், இதுகுறித்து எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து வனத்துறையினர் லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கூடலூர் வனச்சரக எல்கைக்குட்பட்ட வன்னாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் சட்ட விரோத வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனவர் திருமுருகன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இரு பிரிவுகளாக பிரிந்து சென்றபோது, முடநாரி புதுப்பாலம் அருகே வனவிலங்கு வேட்டையாட தரை யில் கட்டியிருந்த கம்பியில் மின் இணைப்பு கொடுத்திருந்ததை பார்த்ததாக வும், அப்போது அங்கிருந்த குள்ளப்ப கவுண்டன் பட்டியைச்சேர்ந்த ஈஸ்வரனை பிடித்து விசாரித்த போது, டார்ச் வெளிச்சம் தெரிந்ததால் அங்கு யார் யார் உள்ளனர் எனக் கேட்டுக் கொண்டிருந்த போது, ஈஸ்வரன் வனவர் திருமுரு கனையும், பென்னியையும் கீழே தள்ளி விட்டு வனப் பகுதிக்குள் ஓடினார். வனத்து றையினர் பின்னால் ஓடிச்சென்று பிடித்து இழுத்தபோது அவர் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்த முற்பட்ட போது திரு முருகன், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஈஸ்வரனை நோக்கி சுட்ட தாகவும் இதில் ஈஸ்வரன் இறந்ததாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈஸ்வர னின் உறவினர்கள் வனத்துறையின் நட வடிக்கையை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறி யலில் ஈடுபட்டனர். ஈஸ்வரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்ட னர். அங்கிருந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு ஆட்சியரிடம் புகார் அளிக்க கலைந்தனர்.