புதுதில்லி ஏப்.20- சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி யாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த ஆண்டு (2022) செப்டம் பர் 12-ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதி பதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வு பெற்றார். அதன்பிறகு பொறுப்பு தலை மை நீதிபதியாக டி.ராஜா சென்னை உயர்நீதி மன்றத்தை கவனித்து வரும் நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா பூர் வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. 1962-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த வர் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா. 1985-ஆம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணி யை தொடங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பாம்பே மெர்சண்டைல் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்க ளுக்கு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார் கங்காபூர்வாலா. கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதி பதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த ஆண்டு (2022) மும்பை உயர்நீதி மன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.