states

img

பெங்களூரில் முழு அடைப்பு

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட் சிக்கு வருவதற்கு முன் தமிழ்நாடு அரசை  போல பெண்களுக்கு அரசு பேருந்து களில் இலவச பயண திட்டத்தை அறி வித்தது காங்கிரஸ் கட்சி. “சக்தி” என பெயரிடப்பட்ட இந்த திட்டம் கடந்த ஜுன் மாதம் 11 அன்று தொடங்கப்பட்டது. இந்  நிலையில் இந்த திட்டத்தால் தனியார்  பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை  கார் உரிமையாளர்கள் என பல்வேறு  தரப்பினர் கடுமையாக பாதிக்கப்படு வதாக தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு திங்களன்று பெங்களூரு நகரத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்புக்கு 32 தனியார்  போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரி வித்த நிலையில், திங்களன்று பெங்க ளூரு நகரில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனி யார் பள்ளிக்கு வாடகைக்கு இயக்கும் வாகனங்கள் இயங்கவில்லை. முழு அடைப்புக்கு கடலோர மாவட்டங்களான  தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா பகுதிகளைச் சேர்ந்த தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். 32 மாவட்டங்களைச் சேர்ந்த  தனியார் பஸ்கள் இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அருகேயுள்ள மாவட்  டங்களில் இருந்து, கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு வந்து சேரும் தனியார்  பஸ் சேவையிலும் பாதிப்பு எதுவும் இல்லை. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பஸ் சேவை பாதிக்கப்படவில்லை. பெங்களூரு பகுதி யின் நிலைமையை சமாளிக்க கர்நாடக  அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கியது.