states

தீக்கதிர் விரைவு செய்திகள்

1990 முதல் 2012 வரை நிலம் கொடுத்ததற்காக என்எல்சி-யில் 862 பேருக்கு பணி வழங்கப் பட்டுள்ளது. 862-ல் 834  பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்கள். நிலம்  கொடுக்காத 28 வடமாநி லத்தவர்களுக்கும் என்எல்சியில் பணி வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளி யாகியுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை யில் சர்வதேச மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடை பெறவுள்ள நிலையில்,  மாரத்தான் பங்கேற்பாளர் கள் வசதிக்காக ஞாயிறன்று அதிகாலை 3:40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்படும், மாரத்தானில் பங்கேற்போர் அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கட்டணம் இன்றி பய ணிக்கலாம் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறி வித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே  உள்ள கீழடி அருங்காட்சி யகத்தின் வார விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து செவ்வாய்க்கிழமை யாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் இரவு 7 மணி வரை அருங் காட்சியகம் திறந்திருக்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தொழிலதிபரை மிரட்டி பட்டாசு ஆலையை கிரயம் செய்த விவகாரத்தில் அதி முக முன்னாள் எம்எல்ஏ ராஜ வர்மன் உட்பட 6 பேருக்கு  எதிரான வழக்கை விசா ரித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை ராஜவர்மன்  மனைவி பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது. 

ஈரோடு கணபதி நகரி லுள்ள ஆடிட்டர் துரைசாமி என்பவரது வீட்டில், ஆளில்லாத போது வீட்டின் பின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 150 சவரன் நகை கள் கொள்ளை அடித்து கை வரிசை காட்டியுள்ளனர்.

வரதட்சணை புகார் பதிவு: டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் கடிதம்

சென்னை, ஆக.5- வரதட்சணை கொடுமை புகார் பதிவு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபிக்கு) அரசு வழக்கறி ஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.  அதில், புகார்களை பதிவு செய்யும் போது முதல் தகவல் அறிக்கையில் கண வர் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். வழக்கு களில் தேவையின்றி போலீஸ் கைது செய்யக்கூடாது; அதை நீதிபதிகள் அங்கீகரிக்கக் கூடாது என்று குறிப்பிட் டுள்ளார்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஆக.5- கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்  மற்றும் கபினி அணைகள் அதனுடைய  முழு கொள்ளளவை எட்டும் தருவாயில்  உள்ளது. இதனால் கர்நாடக அணை களில் இருந்து உபரி நீர் தமிழ்நாட்டிற்கு வெளியேற்றப்பட்டது. இந்த நீர் வரத்தால் கடந்த வாரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21,000 கன அடி வரை அதிகரித்தது.  இதனிடையே கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப் படியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை  பெய்து வருவதால் கர்நாடக அணைக ளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி யாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதி கரித்ததால் மெயின் அருவி, சினி  அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளிலும்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எப்.எம்.உரிமம் வாங்கித் தருவதாக  ரூ.1 கோடி மோசடி

சென்னை, ஆக.5- சென்னை பாரிமுனை பகுதியை  சேர்ந்தவர் பீர் அனீஸ் ராஜா. பம்மலை சேர்ந்த விஜய ராகவன் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பீர் அனீஸ் ராஜாவை அணுகி தங்களுக்கு எப்.எம். ஒலிபரப்பு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவற்றின் பண்பலை அலைவரிசைகளை விலைக்கு வாங்கி வியாபார நிறுவனங்களுக்கு விளம்பரத்திற்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  அதற்காக ரூ.1 கோடியே அறுபது  லட்சத்திற்கு மேல் பெற்று, மோசடியில்  ஈடுபட்டுள்ளனர். பின்னர் பணத்திற்கு பதிலாக தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று போலியான ரசீதையும் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.  இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விஜய ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரதீபாவை தேடி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஆக.5- தங்கம் விலை உயர்வதும், குறை வதும் அவ்வப்போது நிகழ்ந்து வரு கிறது. இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்து தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது. அதன்படி, சென்னை யில் சனிக்கிழமை (ஆக.5) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து 44,440 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராமம் ரூ.20 உயர்ந்து ரூ.5,55 க்கு  விற்பனை செய்யப்பட்டது.

பிளவு நிலையில் குஜராத் பாஜக :  பொதுச் செயலாளர் ராஜினாமா

குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு எதிராக தெற்கு குஜராத்தில் சொந்த கட்சிக்குள்ளேயே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருகிறது. கட்சித் தலைவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் சி.ஆர்.பாட்டீல் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டியதற்காக, சூரத் குற்றப் பிரிவினரால் மூன்று பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சோரியாசி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சந்தீப் தேசாயும் ஆவார். இந்த விவகாரம் காரணமாக அதிருப்தியில் இருந்த குஜராத் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பிரதீப்சிங் வகேலா சனியன்று தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கவே ஹரியானா கலவரம்

“ஹரியானா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் கலவரங்கள் மற்றும் வகுப்புவாத பதற்றத்தை தூண்டியுள்ளது. வன்முறையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் முஸ்லிம்களை அச்சுறுத்தி, வீடுகளை இடிப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஆகும். 2024-தேர்தலுக்கு முன் வகுப்புவாத கலவரங்களின் அசல் மூலோபாயத்திற்கு பாஜக திரும்பியுள்ளது.” என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி  சாகேத் கோகலே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு நீதிமன்ற விசாரணைகள்

“நீதிமன்ற விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ராகுல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தினம்,  அவருக்கு வழங்கப் பட்ட தண்டனை நியாயமற்றது என்றும், அது நிலைக்காது என்றும் நான் பகிரங்கமாகச் சொன்னேன். சொன்னது போலவே நடந்துள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுக்குரியது” என மாநிலங்களவை எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பேசினார்.

காங்கிரஸ் மீது மீண்டும் பாயும் குமாரசாமி

மதச்சார்பற்ற ஜனதாதள (ஜேடிஎஸ்) தலைவர் எச்.டி.குமாரசாமி பாஜகவை தவிர்த்து காங்கிரஸ் கட்சியை அதிகம் விமர்சித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் ஜேடி(எஸ்) இணையப் போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) மூத்த தலைவருமான தேவகவுடா பாஜக உடன் கூட்டணி இல்லை என மறுத்தார். இந்நிலையில், எச்.டி.குமாரசாமி மீண்டும் காங்கிரஸை தாக்கி கூறியுள்ளதா வது,”கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழல் செய்கிறது. அமைச்சர் ஒருவர் தனது துறையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் குறிப்பிட்ட சதவீதத்தை கேட்கிறார். “கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி) வெளியேறியது. ஆனால் அவர்கள் நிர்வாகத்தை காங்கிரஸிடம் ஒப்படைத்தனர்” எனக் கூறியுள்ளார்.

மன அழுத்த பிரச்சனைக்கு புதிய மருந்து

மகப்பேறுக்கு பிறகு ஏற்படும் மன அழுத்த (PPD) சிகிச்சைக்கு புதிய வாய்வழி மருந்தான ஜுரனோலோனின் (Zurzuvae) மருந்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மகப்பேறுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வு (PPD) சிகிச்சைக்கு  “IV” என்ற ஊசி மற்றும் மருத்துவ ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

கவலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கோபர்நிகஸ் காலநிலை மாற்றத்தால் நடப்பு வாரத்தில் உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பில் 20.96 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 2016இல்  20.95 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை இருந்தது. 0.01% அதிகரிப்புதான் என்றாலும் இந்த வெப்பநிலை உயர்வு அபாயத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் மோதல் 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே பயங்கர  மோதல் ஏற்பட்டது. மோதலில் இரண்டு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி காவல்துறையின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் இரு கட்சியைச் சேர்ந்த  ஏராளமானோர் காயமடைந்தனர்.