இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்
சென்னை,அக்.24- விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவருமான என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழக முடிவில் கையெழுத்திட மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப் போராட்டத்தில் ஈடு பட்டு மதுரைக்கு பெருமை சேர்த்த சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்துவது என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளை பல் கலைக்கழக வேந்தரான ஆளுநர் அர சியல் காழ்ப்புணர்ச்சியோடு நிரா கரித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகச் செயலாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பினை தனது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆளுநர் பயன்படுத்துவதை இந்திய மாண வர் சங்கம் வன்மையாகக் கண்டிப்ப தோடு, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. விடுதலைப் போராட்ட வீரரும் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை உரு வாக்கிய தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யாவை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் ஆளுநரை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 26, 27 தேதிகளில் பல்லாயிரக்கணக்கில் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தை நடத்த இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.