states

இணையவழியில் கட்டணமில்லா பயண அட்டை

சென்னை, செப்.8- மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமி ழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட் டோருக்கு அரசு போக்கு வரத்துக்  கழகங்கள் சார்பில் பேருந்து களில் பயணிப்பதற்கான கட்டண மில்லா பயண அட்டை வழங்கப் படுகிறது. இந்த பயண அட்டைகள் இணையவழியில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் போக் குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், பல்லவன் போக்கு வரத்து அறிவுரைப் பணிக்குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன் இணைந்து, இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக் கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் பயண அட்டைகள் இணையவழியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வசதியை சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், வீட்டின் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதற்கான உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்னர், பயண அட்டையை ஏ 4 தாள் அல்லது பிளாஸ்டிக் அட்டையில் பதி விறக்கம் செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.