states

நீதித்துறை வீழ்ந்தால் நாட்டிற்கு இருண்டகாலம்தான்

மும்பை, ஜன.29-  நீதித்துறை வீழ்ந்தால் நாட்டில் இருண்ட சகாப்தம் தொடங்கும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலிநாரி மன் பேசியுள்ளார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங் களின் நீதிபதிகளை நியமிக்கும் முறை யான ‘கொலிஜியம்’ தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரு கிறது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, கொலிஜியம் குறித்து பொது வெளியில் தொடர்ந்து விமர்சித்து வரு கிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் பேசுகையில், ‘கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்யா தது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஜன நாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும். அப்போது புதிய இருண்ட சகாப்தம் தொடங்கும்.  

கொலிஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன், ஒன்றிய அரசு 30 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சுதந்திர மான, அச்சமற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வில்லை என்றால் நீதித்துறையின் சுதந்திரம் என்னவாகும்? ஒரு நீதிபதியை நியமிக்கலாமா, வேண்டாமா என்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை காட்டிலும் வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்?. எனவே, கொலிஜியம் அமைப்பின் நடை முறைகளில் வேறுபாடுகள் இருந்தால் கூட அதை ஏற்கவேண்டியது ஒன்றிய அமைச்சர் மற்றும் அரசின் கடமை என்று தெரிவித்தார்.