states

சென்னையில் இன்று ‘மலர் கண்காட்சி’

சென்னை, ஜூன் 2- முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன்3) முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஏராள மான வண்ண வண்ண மலர்கள் கலைவா ணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு  வைத்துள்ளனர். இந்த மலர் கண்காட்சி ஜூன் 3 ஆம்  தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி  முதல் மாலை 8 மணி வரை பார்வை யிடலாம். இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் நிர்ணயம்  செய்துள்ளனர்.