சென்னை, ஜூன்11- பகுதி நேர வேலை தருவதாக கூறி சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆந்திர மாநில மாணவியிடம் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மோசடி செய்த வரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் சரித்தா தல்லூறு (18). இவர் சென்னையில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி முதலாமாண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இதனிடையே, பொருளா தார தேவைகளுக்காகப் படித்துக் கொண்டே பகுதி நேர வேலை பார்ப்பதற்காகத் தனது செல்போன் மூலம் வேலைவாய்ப்பு தேடியுள்ளார். அப்போது ஆந்திராவை சேர்ந்த தவு நிதீஷ் ரெட்டி என்பவரிடம் வாட்ஸ்அப் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் னர் அவரிடம் பகுதிநேர வேலை தொடர்பாக கேட்டபோது, முதலில் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் நல்ல சம்பளத்தில் வேலை கொடுப்ப தாக உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய மாணவி, நிதீஷ்க்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை செயலி மூலம் அனுப்பி இருக்கிறார். அதன் பின்னர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறியதை நம்பிய மாணவி, மீண்டும் தன்னுடைய சக மாணவர்களிடம் பணத்தைக் கடன் வாங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி இருக்கிறார். இதன் பின்னர் நிதீஷிடம் இருந்து எந்த பதிலும் வராத தால், தான் ஏமாற்றப்பட்டதை மாணவி உணர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சைபர் கிரைம் காவல்துறையிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.