states

நாடாளுமன்றம் கட்டியதில் மோடி அரசு ஊழல்

புதுதில்லி, அக். 31- ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் தரைகள் வெறும் 5 மாதத்திற்குள் பெயர்ந்து விட்ட  நிலையில், அதனை சீரமைக்க மோடி அரசு ரூ.32 கோடிக்கு டெண்டர்அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறந்து  5 மாதங்களே ஆகியுள்ள நிலையில், டைல்ஸ் கற்கள் பெயர்ந்துவிட்டதாகவும், நாற்காலிகள் உடைந்து போனதாகவும் கூறி, அதனை சரிசெய்ய மோடி அரசு ரூ.32 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாற்காலிகளைச் சரிசெய்வது, பிளம்பிங், பாதுகாப்புப் பணிகளுக்கு 6.64 கோடி ரூபாயும், உடைந்த டைல்ஸ்களை மாற்றுவதற்கு 5.99 கோடி ரூபாயும், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட பணி களுக்கு 20 கோடி ரூபாயும் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 5 நாள் கூட்டத்திற்கே தாங்காத நாற்காலி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு தொடர் நடை பெற்றது. வெறும் 5 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த கூட்டத்தொடருக்கே புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நாற்கா லிகள் தாங்கவில்லை என ஒன்றிய மோடி  அரசு கூறியுள்ளது. புதிய கட்டடத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதன் உறுதித்தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.