states

பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பயிற்சியாளர் நீக்கம்

பாஜக ஆளும் ஹரியானா மாநில அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் மீது ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் ஒரு வர் பாலியல் கடந்த 2022இல் புகார் அளித்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு  சந்தீப் சிங் மீது 354, 354 பி, 342, 506   ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நட வடிக்கை மேற்கொள்ளாமல் ஆளும் பாஜக அரசு மல்யுத்த வீராங்கனைகளின் புகாரில் பாஜக எம்பி பிரிஜ் பூசனை காப்பாற்றியதைப் போல சந்தீப் சிங்கை யும் காப்பாற்ற அராஜகத்தை கையி லெடுத்துள்ளது. பாலியல் புகார் அளித்த  பெண் பயிற்சியாளரை இடைநீக்கம் செய்துள்ளது. ஹரியானாவின் விளை யாட்டுத் துறை இயக்குநர் யஷேந்திர சிங் பிறப்பித்துள்ள இடைநீக்க உத்தர வில், இடைநீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.  பாலியல் புகாரில் சிக்கிய ஹரியானா  அமைச்சர் சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.