states

6 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்று தந்தையும் தற்கொலை

சென்னை, ஆக.24- சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன் வயது 52.  அவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை யில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதில்  அவர் லட்சக்கணக்கில் பணம் இழந்துள்ளார். இதனால் கடன்  தொல்லை அதிகமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. கணவர் சூதாட்டத்தில் இருந்து மீளாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு  குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள திட்ட மிட்டனர். இதற்காக தனது மூத்த மகள் குணாலினி கழுத்தை நெரித்து கொன்றார். மனைவி கல்பனா தூக்கில்  தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார். கீதா கிருஷ்ணன் தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு விட்டு இளைய மகள் மானசாவுடன் திருப்பதிக்கு சென்று தலைமறைவானார். அதன் பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்த கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானசாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஆன்லைன் விளை யாட்டு ஆசையில் கீதா கிருஷ்ணன் மீண்டும் விழுந்தார். இதையடுத்து, இளைய மகள் மானசாவின் கழுத்தை நெரித்து கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓட்டேரியைச் சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதா கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான் அவர் மகளு டன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  கீதா கிருஷ்ணன் தான் வசித்து வந்த வீட்டை குத்தகைக்கு விட லட்சுமி பதியிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் குத்தகைக்கு  விடாமல் இழுத்தடித்ததால் லட்சுமி பதி  பணத்தை திரும்ப கேட்பதற்காக சென்ற  போது தான் தற்கொலை சம்பவம் வெளி யில் தெரிய வந்துள்ளது.