தஞ்சாவூர், மார்ச் 2- மயிலாடுதுறையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 2023-24 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு வழங்கி யது போல், இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட் களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க, அனைத்து பிரதான பகுதிகளிலும் குளிர் பதனக் கிடங்கு அமைக்கவேண்டும். முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் பகுதியில் அமைத்திட வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இயங்கும் இடங்கள், நிரந்தர பாதுகாப்பு கருதி கட்டிடங்கள் அமைக்க வேண்டும். அறுவடைக் காலங்களில் இயந்திர பற்றாக் குறையால் தனியார் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, அரசே அனைத்து வட்டங்களிலும் அறுவடை இயந்திரத்தை இயக்கவேண்டும்.
தென்னை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதற்கு தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இறவை பாசனத் திட்டம் ஒக்கநாடு கீழையூர், அரசப்பட்டு, பருத்திக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்உள் ளது. இதனை உடனடியாக புதுப்பித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாய்க்கால் தேவைப்படும் உய்யக்கொண்டான், கட்டளைக் கால்வாய் பகுதிகளில் அமைப்பை தர வேண்டும். மேலும் விவசாயக் காலங்களில் நீர் பற்றாக்குறையை தவிர்க்க தடுப்பணைகள், நீர்த்தேக்கங் களை புதிதாக அமைத்திட வேண்டும். ஏற்கனவே விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளதால் ஆயக்கட்டில் இணைக்கப்படாத ஏரிகள் பகுதிகளை ஆயக்கட்டில் இணைக்க வேண்டும். ஒன்றிய அரசால் விவசாயிகளுக்கு பறிக்கப்பட்டுள்ள உணவு மானியம் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து விவ சாயிகளை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு திட்ட ஒதுக்கீடு செய்திட வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும். மேலும்அனைத்து விளை பொருட்களையும் சந்தைப்படுத்து தல், மதிப்பு கூட்டுதல், அரசே கொள் முதல் செய்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.