states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த  காலங்களில் அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்ட கிராம மக்களின் நிலத்திற்கு அதிக  இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட் டத்தில்  பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ்  திகாயத் இணைந்தார்.

நாடு முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பணியின் போது மரணமடைந்த காவல் துறையினர் எண்ணிக்கை 188 ஆக உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான 33 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்  பட்டியலைக் காங்கிரஸ் சனியன்று வெளியிட்டுள் ளது. முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புராவிலும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதே போல 83 பிற கொண்ட வேட்பாளர் பட்டியலை சனியன்று வெளியிட்டது பாஜக.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர்  சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு குடியரசு தலை வர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சாதிய  பாகுபாடு, ஆணாதிக்கம் போன்றவற்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் சந்திர பிரியங்கா முதல்வர் ரங்க சாமிக்கு கடிதம் அளித்தார்.

ஜார்கண்ட் கோடெர்மா பகுதியில் சாலை யோரத்தில் பானிபூரி சாப்பிட்ட பெண்  கள், சிறுமிகள் உள்பட 50 பேர் உடல்நலம் பாதிக்  கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள னர்.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக அசோக்  வஸ்வானியின் நியமனத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்பு தல் அளித்துள்ளது. அசோக் வஸ்வானி மூன்று ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி  ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளு டன் புனேவில் இருந்து தில்லி நோக்கி புறப்பட்ட ஆகாசா ஏர் விமானம் சனியன்று மும்பை சர்வதேச  விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக் கப்பட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் மாண வர் ஒருவர் மேடை ஏறினார்.  உடனே அங்கிருந்து  பேராசிரியை மம்தா கௌதம் இந்த கோஷங்களை எழுப்பக்கூடாது என்று கூறி மேடையில் இருந்து மாணவரை கீழே இறக்கி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதையடுத்து பேராசிரியை மம்தா கௌதம் உட்பட இரண்டு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.