states

கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்: தமுஎகச கண்டனம்

சென்னை, மே 10- கவிஞர் விடுதலை சிகப்பி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்து டன் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமுஎகச மாநி லத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை: மலக்குழியில் இறக்கிவிடப்  பட்டு அன்றாடம் செத்தொழிவதற் கென்றே ஒருசில சாதிகளை கட வுள்கள்தான் படைத்தனரென சொல்லப்பட்டால், அந்தக் கடவு ளர்கள் ஒருநாள் இறங்கி, அந்த வாழ்வு எவ்வளவு கொடியது என் பதை நேரடியாய் உணரட்டும் என்  கிற மெய்யாவேசத்துடன் எழுதப்  பட்டதுதான் விடுதலை சிகப்பியின் கவிதை. ஆனால் இக்கவிதை கட வுள்களை அவமதித்துவிட்டதாக வும் தங்களது மனதை புண்படுத்தி விட்டதாகவும் திரித்து பாரத் இந்து  முன்னணி என்கிற அமைப்பின் மத் திய சென்னை மாவட்டத்தலைவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பொய்ப்புகாரளித்துள்ளார். கலை இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிய  நீதிமன்றத் தீர்ப்புகளின் வெளிச்  சத்தில் இந்தப் புகாரின் மெய்த்தன்  மையை சரிபார்க்காமல் அவசரகதி யில் விடுதலை சிகப்பியின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தமுஎகச கண்டனம் தெரிவிக்கிறது. 

நீதிமன்ற வழிகாட்டல்கள்

“ஆபாசத்தை மதிப்பிடும் நோக்  கத்திற்கு, அவ்வாறு மதிப்பிடுபவர், முதலில் படைப்பாளி உன்மையி லேயே எதைச் சொல்லவருகிறார் என்பதை உணர, படைப்பாளி யின் தரப்பில் நின்று அதைப் பார்த்த  பிறகு, அதைப்படிக்கும் வாய்ப் புள்ள ஒவ்வொரு வயதுப்பிரிவைச் சேர்ந்த வாசகரின் நிலையில் நின்று அதைப் பார்த்துவிட்டு, அதன் பிறகே விருப்புவெறுப்பற்ற ஒரு முடி விற்கு வர வேண்டும்” என்கிறது சம ரேஷ் போஸ் (எதிர்) அமல் மித்ரா  (1985) 4 எஸ்.சி.சி.289 என்ற வழக்கின்  தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் கருத்தை ஏற்றுத்தான், இந்துக்களால் வணங்கப்படும் ஆண் பெண் தெய்  வங்களை எம்.எஃப்.ஹூசைன் தனது ஓவியங்களால் அவமதிப்ப தாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட ‘மக்பூல் ஃபிடா ஹூசைன் (எதிர்) ராஜ்குமார் பாண்டே, 2008 குற்.எல்.ஜே.4107 என்ற வழக்கு தள்ளு படி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் மீதான வழக்கின் தீர்ப்பிலும்  இத்தீர்ப்பு வழிகாட்டலாக எடுத் தாளப்பட்டுள்ளது.

வழக்கை ரத்து செய்க!

‘நாவலைப் படித்த பிறகு வாசக ரின் நெஞ்சைத் தொடும் விசயம் என்ன?’, ‘…அதன் உண்மையான கருத்தோட்டம், கதைக்கரு ஆகி யவற்றின் மூலமே இந்த நாவலைப் புரிந்துகொள்ள வேண்டும். உரை யாடல்களை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ள மண்சார்ந்த மொழி அல்லது மேலும் அதிகமான வசைச்சொற்களை பயன்படுத்தியுள்ளதை வைத் துக்கொண்டே நூலாசிரியரிடம் சண்டையிழுக்க முடியாது’ என்று  பெருமாள்முருகன் மீதான வழக் கின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்து விடுதலைசிகப்பியின் கவி தைக்கும் பொருந்தும். ஆனால் இந்தத் தீர்ப்புகளுக்குப் புறம்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விடுதலை சிகப்பியின் மீது பதிந் துள்ள வழக்கினை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். 

நிபுணர்கள் குழு அமைத்திடுக!

பாகுபாடும் ஒடுக்குமுறையும் கொண்ட தங்களது கருத்தியலுக்கு எதிரான விமர்சனங்கள் வெளிப்படு வதைத் தடுப்பதற்காக ‘மனம்  புண்பட்டுவிட்டது’ என்று சொல்லிக் கொண்டு வரும் சனாதனக்கும்ப லின் அரசியல் அழுத்தங்களுக்கு காவல்துறையினர் பணிந்துவிடாத படி தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். மேலும் “கருத்துகள் தொடர்பாக உருவாகும் இத்தகைய மோதல்களால் உருவாகும் நிலை மைகளை சமாளிக்கும் வகையில் நிபுணர்கள் குழு ஒன்றை அரசு உரு வாக்க இதுவே சரியான தருண மாகும். படைப்பிலக்கியம், கலை  போன்ற துறைகளைச் சேர்ந்த தகு தியான நபர்களைக் கொண்டதாக இந்த நிபுணர்கள் குழு இருக்க வேண்டும்” என்று பெருமாள் முரு கன் தீர்ப்பில்  சென்னை உயர் நீதி மன்றத்தால் முன்மொழியப்பட்ட குழுவை தமிழ்நாடு அரசு உடனே அமைக்கவேண்டும்.