சென்னை, மார்ச் 3- திரைக் கலைஞர் வடிவேல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலியாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவ காரத்தில் தனியார் அமைப்பு நிர்வாகி களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங் களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த பிப்ரவரி 28 அன்று நடை பெற்றது. இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பு ராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப் பாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டி ருந்தார். அவர் விழாவுக்கு செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டியில் மோசடியான முறையில் விழாவை நடத்தியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். நீதிபதி வள்ளி நாயகத்தின் கடி தத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன் படுத்தி இருப்பதும் அம்பலமானது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஸ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத் தில் முக்கிய குற்றவாளியாக கருதப் படுகிறார். சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் செயல்படும் இவர் தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஹரிஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தப்பி ஓடி தலை மறைவாகியுள்ள ஹரிசை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.