states

பொறியியல், கலை- கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜூலை 8- சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அம்மா ணவர்கள் தமிழகத்திலுள்ள அரசு கலை  மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூ ரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப் படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள் ளார். சென்னை தலைமைச் செயல கத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளனர். எனவே அந்த மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் 5 நாட்களுக்கு கல்லூரி களில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்ப டுகிறது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தேர்வு முடிவு களைப் பொருத்தே அமையும். இதுவரை அரசு கலை கல்லூரி களுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுத்  தரப்பிலும், தேர்வு முடிவுகளை வெளி யிடுமாறு சிபிஎஸ்இயிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு மற்றும் தனியார் கல்லூரி களுக்கும் பொருந்தும். அரசு கல்லூரிகளில் சேர மாணவர் கள் அதிகமான அளவில் விண்ணப்பித் திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங் களைவிட 25 விழுக்காடு அதிகமாக உயர்த்தப்படும். முன்னதாக 15 விழுக்காடாக இருந்தது. கொரோனா காலமாக இருந்ததால், கடந்தஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 விழுக் காடு உயர்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியர்களின் எண்ணி க்கை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த ப்படுகிறது.