states

மருத்துவக் கல்லூரிகளில் அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஆக. 12- தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர் வாக ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை நிறை வடைந்துள்ளது.  இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவர்களுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ இடங்க ளுக்கு சேர்க்கை ஆணை பெற்ற வர்கள் ஆக.11 ஆம் தேதி மாலைக் குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். இவ்வாறு சேராத இடங்கள் காலி யாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என  அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வ தற்கு அவகாசம் நீட்டிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து மருத்துவ மாணவர் தேர்வுக் குழு செயலர் முத்துசெல்வன் கூறுகையில், “கல்விக் கட்டணம் செலுத்த அவகா சம் வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, மருத்துவம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு கால அவகாசம் வரு கிற 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன்பின், கல்லூரி களில் சேராதவர்கள் இடங்கள் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப் படும் என்றார்.