states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஊழல் பாஜக : ராகுல் குற்றச்சாட்டு

பெங்களூரு , ஏப். 16 - கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், ‘‘அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு உள்ளது என நாடாளுமன்றத்தில் கேட்டேன். கேள்வி கேட்டதற்காக என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர். பாஜகவின் ஊழல்களை பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது மைக்கை அணைத்து விடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பாஜக செய்யும் அனைத்துப் பணிகளுக்கும் 40 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். உதவி பேராசிரியர், பொறியாளர் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது’’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

அண்ணாமலைக்கு நோட்டீஸ்

சென்னை, ஏப். 16 - திமுகவினர் மீது தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த  வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். இதில், அண்ணாமலை தனது பேச்சுக்கு  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இழப்பீட்டு தொகையாக ரூ.500 கோடி தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவிலிருந்து விலகினார் முன்னாள்  முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

பெங்களூரு, ஏப்.16- கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்  மே 10  அன்று நடைபெறுகிறது. இதில் வேட்பா ளர்கள் விவகாரத்தில் பாஜகவில் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. பாஜகவில் எம்.எல்.ஏக்களாக உள்ள பலருக்கும் சீட்  கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி யடைந்த அவர்கள் பாஜகவில் இருந்து விலகு வதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆத ரவாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனால் கர்நாடக பாஜக தலைமையும்  தேசிய தலைமையும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விலகலில் அடுத்த அதிர்ச்சியாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் ராஜினாமா அமைந்துள்ளது. பாஜக மூத்த  தலைவரும் வட கர்நாடகாவில் பிரபலமான வருமான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக அவர் குரல் எழுப்பினார். தில்லிக்கு சென்று நேரடியாகவும் பேசிப் பார்த்தார்.ஆனால் அவருக்கு சாதகமாக அமையவில்லை.  இதனையடுத்து பாஜகவில் இருந்து தாம் விலக முடிவு எடுத்துள்ளதாக ஜெகதீஷ்  ஷெட்டர் அறிவித்தார். முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலை வர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து  சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால்  ஹூப்ளி தொகுதியில் தாம் போட்டியிடுவேன்  என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்  நிலையில் ஏப்ரல் 16 அன்று  சட்டசபை சபா நாயகரை சந்தித்து தமது எம்.எல்.ஏ. பதவி யை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து ஷெட்டரை தமது அணிக்கு கொண்டுவருவதில்  காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப் படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகுவதால் வடக்கு கர்நாடகாவில் 30 தொகுதிகளை பாஜக பறிகொடுக்கும் நிலை மை உள்ளது. ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹூப்ளி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று  கூறப்படு கிறது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: முதல்வர் நிதியுதவி

சென்னை,ஏப்.16- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரியிலுள்ள தனி யாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை யில், பூத்தோட்டி எனப்படும் பட்டாசு களை தயாரிக்கும் பணி நடை பெற்றபோது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 2 ஆண் தொழி லாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் பட்டாசுத் தொழிற் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்ப தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சேலத்தில்  103 டிகிரி வெயில்

சேலம், ஏப்.16- கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் இப்போதே 103.7 டிகிரி பாரன் ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு 100 டிகிரிக்கு  மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.  அதன்படி வெப்ப நிலை அதிகரிக் கிறது. கடந்த 14 ஆம் தேதி அதிக பட்சமாக 105.7 டிகிரி பதிவானது. வெயில் தாக்கம் அதிகரிப்பால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பகலில் நீண்ட தூர பயணத்தை தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே மேற் கொள்கின்றனர். 

அண்ணாமலைக்கு பணம் கொடுப்பது யார்? காங்கிரஸ் கேள்வி 

சென்னை, ஏப்.16- பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை பயன்படுத்தி வரும் கைக்கடி காரம், தனக்கு வந்து சேர்ந்தவிவரம், தனது வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை தனது நண்பர்கள் ஏற்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டிருப்பதாவது: எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலை வராக இருக்கிறேன். நான், சென்னை நந்தனத்திலுள்ள தமிழ் நாடு அரசு அடுக்குமாடி குடியிருப் பில் மாதம் ரூ.16 ஆயிரம் வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்தி ருந்ததாக கூறிய பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு  மூன்றே முக்கால் லட்சம் ரூபாய் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரம் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய

தங்கம் விலை குறைந்தது

ெசன்னை, ஏப்.16- தமிழ்நாட்டில் 22 காரட் ஆபரணதங்கம் ஒரு கிராம் 5,720 ரூபாய்க்கும்; சவரன் 45 ஆயிரத்து 760 ரூபாய்க்கும்விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி 83 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 5,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் சரிவடைந்து 45  ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1.50 ரூபாய் குறைந்து 81.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நீரில் மூழ்கி 4  சிறார்கள் மரணம்: நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை, ஏப்.16- நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகரைச் சேர்ந்த இனியவன் (12), சந்துரு, (12) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் உள்வட்டம், பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் முருகன்-பார்வதி தம்பதியினரின் குழந்தைகள் புவனா (11), வினோத் (7) ஆகியோர் பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள் வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.