states

தனியார் பால் நிறுவனத்துடன் முன்னாள் அமைச்சர் சமரசம்

சென்னை, டிச.12- தரமற்ற பால் விற்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்த குற்றச்சாட்டு விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட தாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை  அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,  தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம்  குறைந்துள்ளது. இதைக் குடிக்கும் மக்க ளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்று பேட்டி அளித்திருந்தார். தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டி யும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன  பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். இதன்பின்னர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய  வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி உடனான பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி  என்.சேஷசாயி முன்பு திங்களன்று (டிச.12) விசாரணைக்கு வந்தது. அப்போது  இரு தரப்புக்கும் இடையே சமசரம் ஏற்பட்டு விட்டதால் மனுவை திரும்பப் பெற்றுக்கொள் வதாக தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல்  செய்த வழக்கை திரும்பப் பெற அனுமதி யளித்து உத்தரவிட்டார்.