states

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் விடுதலை ரத்து

சென்னை, செப்.19- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உதவியாளர், அவரது மனைவியை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், இந்திர குமாரி. அவரிடம், 1991-1996 ஆம் ஆண்டுக ளில், நேர்முக உதவியாளராக பணிபுரிந்த வர் வெங்கடகிருஷ்ணன். தன் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 73 லட்சத்து 78 ஆயிரம் அளவுக்கு சொத்து  சேர்த்ததாக, வெங்கட கிருஷ்ணன், அவரது  மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு எதிராக,  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2012 ஜன., 11இல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, 2017 இல், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், அரசின் மேல்முறை யீட்டு மனுவை ஏற்று, தகுதி அடிப்படை யில், 12 மாதங்களுக்குள் விசாரித்து உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதி மன்றத்திற்கு இந்த ஆண்டு பிப்., 14 இல் உத்தரவிட்டது. அதன்படி, அந்த மேல்முறையீட்டு மனு,  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசார ணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்க ளுக்கு பின், நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆவணங்களை ஆய்வு செய்ததில், வருமானத்துக்கு அதிகமாக, 708 விழுக் காடு அளவுக்கு, வெங்கட கிருஷ்ணன், அவரது மனைவி சொத்துகள் சேர்த்துள்ளது  நிரூபிக்கப்பட்டது. எனவே, இருவரையும் விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கு தண்டனை விவரம் குறித்து விளக்கம் அளிக்க, வெங்கடகிருஷ்ணன், மஞ்சுளா ஆகியோர், செவ்வாயன்று ஆஜராகும்படி ‘நோட்டீஸ்’ அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.