அகமதாபாத், நவ. 22 - “காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் வாரிசு கள்தான் பதவிக்கு வரமுடியும்; பாஜகவில் மட்டுமே சாதாரண பின்னணியைக் கொண்டவர்கள் கூட அதிகாரமான பதவிக்கு வரமுடியும்” என்று பாஜக தலைவர்கள் இப்போதும் ஜம்பம் அடிக்கத் தவறு வதில்லை. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் இப்போதும் ‘இள வரசர்’ என்றே குறிப்பிட்டு விமர்சிப்பதைப் பார்க்க முடியும். உ.பி. சென்றால், முலாயம் சிங் மகன் அகி லேஷ், பீகார் மாநிலத்திற்குச் சென்றால் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி, ஜார்க்கண்ட் சென்றால் சிபுசோரன் மகன் ஹேமந்த் சோரன், தெலுங்கா னா சென்றால் கே. சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராமராவ், கர்நாடக சென்றால் தேவகவுடா மகன் எச்.டி. குமாரசாமி தமிழகத்திற்குச் சென்றால் கலை ஞர் கருணாநிதி மகன் மு.க. ஸ்டாலின், ஜம்மு - காஷ்மீருக்குச் சென்றால் பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லா, முப்தி முகம்மது சயீத் மகள் மெக பூபா முப்தி என ‘வாரிசு அரசியலால் நாட்டிற்கே பேராபத்து’ பட்டியல் இடுவார்கள்.
ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பிசிசிஐ தலைவர் ஆக்கப்பட்டது எப்படி? பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் உ.பி. மாநில எம்எல்ஏ ஆனது எப்படி? கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் பசவராஜ் பொம் மையை கர்நாடக முதல்வராக்கியது எந்த கட்சி? முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத்பிரகாஷ் கோயல் - நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் கோயல் ஆகியோரின் புதல்வனான பியூஸ் கோயல் எவ்வாறு தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.. ஒன்றிய முன்னாள் அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன் தர்மேந்திர பிரதானும் எவ்வாறு ஒன்றிய அமைச்சரானார்? ஒன்றிய முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியாவும் ஒன்றிய அமைச் சராக வந்தது எப்படி? இமாசல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூரை தற்போது ஒன்றிய அமைச்சர் ஆக்கி யது எந்தக் கட்சி? இவர்கள் தவிர, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். ராகவேந்திரா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந் தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பிரீத்தம் முண்டே, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ் வீர் சிங்- இவர்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பி னர்களாக இருப்பது எந்தக் கட்சியில்? என்பதைப் பற்றியெல்லாம் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வாய் திறக்க மாட்டார் கள். முதலாளித்துவ ஊடகங்களும் இதுபற்றி அவர் களிடம் கேள்வி கேட்பதில்லை. உண்மையில் நாடு முழுவதுமே பாஜக-வில்தான் வாரிசு அரசி யல் கொடிகட்டிப் பறக்கிறது.
இதற்கு குஜராத் சட்டமன்றத் தேர்தலும் விதி விலக்கில்லை என்பது தற்போது அங்கு பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளர் பட்டியல் மூலம் அம்பல மாகியுள்ளது. தலைவர்களின் வாரிசுகளுக்கு... அதுவும் அடுத்த கட்சிகளிலிருந்து வந்த தலை வர்களின் வாரிசுகளுக்கு அதிகமான இடங்களை அள்ளிக் கொடுத்திருப்பது குஜராத் மாநில பாஜக-வுக்கு உள்ளேயே அடிபிடி சண்டையாக மாறி, பலர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கும் அளவிற்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 10 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர் மோகன் சிங் ரத்வா. தற்போது 78 வயதாகும் இவர், இந்தமுறை தனது மகனுக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் வாய்ப்பு தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மோகன் சிங் ரத்வா அண்மையில் பாஜக-விற்குத் தாவி னார். தற்போது மோகன் சிங் ரத்வாவின் மகன் ராஜேந்திர சிங் ரத்வா- பழங்குடியினருக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள சோட்டோ உதேபூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஆகியிருக்கிறார். குஜராத் மாநிலம் தஸ்ரா தொகுதியில் பலமுறை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக இருந்தவர் ராம்சிங். செல்வாக்கு மிக்க தலைவர். இவரது மகன் யோகேந்திர சிங் பர்மர் தற்போது தஸ்ரா தொகுதி பாஜக வேட்பாளர்.
குஜராத்தில் கடந்த முறை சவுராஷ்டிரா பகுதி பாஜக-வுக்கு பலத்த அடியைக் கொடுத்தது. இத னால் இந்தமுறை அதைச் சரிக்கட்டுவதற்காக, காங்கிரசில் இருந்து ஆள்பிடித்து அவர்களையே வேட்பாளர்களாக பாஜக நிறுத்தியுள்ளது. காங்கி ரஸில் மூத்த தலைவராகவும் ஜூனாகத் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தவர் ஜாசுபாய் பரத். இவரது சகோதரர் பாகா பரத். தலாலா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த நிலையில், அவரை தங்கள் பக்கம் இழுத்த பாஜக, அவரையே தலாலா தொகுதி வேட்பாளராகவும் நிறுத்தியுள்ளது. பெத்தல்ஜி சாவ்தா பிரபலமான தலைவர் ஆவார். இவரது மகன் ஜவஹர் சாவ்தா. காங்கிரசில் மூத்தத் தலைவராக இருந்த இவர், கடந்த 2019-இல் பாஜகவுக்கு தாவியிருந்தார். தற்போது அவர்தான் மானவதார் தொகுதி பாஜக வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார்.
தீசா தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாள ராக களமிறக்கப்பட்டு இருப்பவர் பிரவீன் மாலி.இவரது தந்தை பாஜக எம்எல்ஏ-வாகவும், அமைச்ச ராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோண்டல் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஜெய்ராஜ்சிங் ஜடேஜா கொலை வழக்கில் சிக்கினார். தற்போது அவரது மனைவி கிதாபா ஜடேஜாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. பாவ்நகர் கிழக்கு தொகுதியில், பாவ்நகர் நகர பாஜக தலைவராக இருக்கும் ராஜீவ் பாண்டியாவின் மனைவி செஜல்பென் பாண்டியாவை பாஜக நிறுத்தி யுள்ளது. இவ்வாறு குஜராத்தில் பல்வேறு தொகுதி களில் அரசியல் பிரபலங்களின் வாரிசுகள், மனைவிகள், குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கும் நிலையில், அவற்றில் 50-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வாரிசுகளையே வேட்பாளர்களாக நிறுத்தி யுள்ளது. குஜராத்தில் ஒரு காலத்தில் காங்கிரசை சேர்ந்த பாரத்சிங் சோலங்கி, சித்தார்த்த படேல், சக்திசிங் கோஹில் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினர் வாரிசு அரசியல் செய்வதாக பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால், தற்போது அதே வேலையைத்தான் பாஜக-வும் செய்துள்ளது. 27 ஆண்டுகளாக ஆட்சி செய்தும்கூட இப்போதும் வாரிசுகளை நம்பியிருக்கும் அளவில்தான் பாஜக-வின் செல்வாக்கு உள்ளது என்பது, குஜராத் வேட்பாளர் தேர்வு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.