புதுக்கோட்டை, ஆக.25 - சூற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி வருமாறு: காவிரி மற்றும் உபநதி களை சுத்தமாகப் பராமரிப்ப தற்காக ரூ.1500 கோடியில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் தயாரிக்கப்பட்டு ஒன் றிய அரசின் நிதிக்காக கரு த்துரு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் காவிரி மற்றும் உபநதிகளில் சாயப்பட்டறைக் கழிவுகள் உள்பட எதுவும் கலக்காத வகையில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 25 பசுமைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப் பட்டது. நிகழாண்டில் 50 பள்ளிகள் தேர்வு செய்யப் பட்டு விருதுகள் வழங்கப்பட வுள்ளன. குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் வகையில், 243 இடங்கள் தேர்வு செய்யப் பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 53 இடங்களில் இருந்த குப்பைக் கிடங்கு கள் முழுமையாக அகற்றப் பட்டு, உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் இத்திட்டத் தின் படி 80 விழுக்காடு குப்பைக் கிடங்குகள் முற்றி லும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார். (ந.நி.)